Thursday, July 26, 2007

ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்

SRI RUTHRA KALAIAMMAN







ருத்ர
காளியம்மன்
ஆலயம்
த்தனை அறிவு பெற்றும் உன்னை நான் அறிந்தேன் இல்லைஎன்றுதான் எனக்கு உன்னருள் வருமோ? ஏழையான என்னைபத்தானாய்ப் பாட வைப்பாய் பரம கருணாகரி பார்வதிபண்பும் பரிவும் பணியும் அருள்வாய் உருத்திரகா ளியேகொத்தடிமை கொண்டேன் குணத்தின் குன்றே! குவலயம் காப்பவளே!கோல மயிலே ! கூவும் குயிலே! கோமளமே! முத்தே!எத்தோ நின் அன்பை நான் என்றறிவேன், அத்தனை மணந்தவளே!எத்தனையும் போதமில்லா ஏற்றம் நிறைந்த என் கண்மணியே!
ஆதி சக்தியையும் ஆதிசிவத்தையும் ஒன்றை விட்டு ஒன்றைத் தனியாக பிரிக்க முடியாது என்றாலும்,உலக இயக்கத்திற்கு காரணமாகச் சிவத்திற்கு அசைவு ,துடிப்பு, சலிப்பு ஆகிய தன்மைகளை உண்டாக்குகிறது.அந்த ஆதிசத்தி. அதனால், சிவம் மறுநிலை எய்தி சூர்த்தெழுந்து படைத்தல், காத்தல், அழித்தல் எனும்முத்தொழிலில் செய்ய முயல்கிறது. அதற்கேற்ப அச்சிவத்தொடு ஆதிசக்தி தன்மயமாகப் பராசக்தியைப்படைத்துக் கொடுக்கிறாள். சக்தி கூடும்பொழுது எல்லா இயக்கங்களும் நடைபெறும்.
சக்தி கூடும்போது உருவமற்றதற்கு உருவமும், நாமம் மற்றதற்கு நாமமும், குணமற்றதற்குக் குணமும்,தெளிவற்றதற்கு நிலையும் உண்டாகின்றன.அதனால், அருட்பிழம்பாகிய ஆத்சக்தி அந்தப் பராசக்தியின்உருவிலிருந்து, பிராஹ்மி, வராகி மகேஸ்வரி,கெளமாரி, வைஷ்ணவி, சாமுண்டி, துர்க்காதேவி, ருத்திரகாளிஎன அட்ட சக்திகள் துணையாகப் படைத்தாள். இந்த சக்திதான் இந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காஅற்புத செயல்களைச் செய்கின்றன.
சத்வ குணத்தில் சாந்தமாக பார்வதியாகவும், இரஜோத குணத்தில் வீர உருவத்தில் துர்க்கையாகவும்,தமோ குணத்தில் உக்கிர ருத்திர காளியாகவும் விளங்கி உலகு அனைத்து சீவன்களிலும், பல்வேறு துறைகளிலும்பலவாறாக நல்வழிப்படுத்திப் பின் சிவ சன்னதியில்உறைகிறாள்.அப்படி சிங்கார சிங்கையில் அமைந்திருக்கும்ருத்திர காளியம்மனை அடுத்து காண்போம்.
சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவனத்தின் அடுக்குமாடி பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்தஅலெக்சான்ரா செங்கல் சூளைப் பகுதியில் ஒரு மூலையில் சாதாரணதோர் அமைப்பில் குடிக் கொண்டு இருந்தருத்ர காளியம்மன், பொலிவு பொங்கும், கலையமசமிக்க அழகிய பெரிய ஆலயத்தில் வீற்றிருப்பது, ஒரு கனவுநினைவானதுதான்.
இப்போது சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவத்தின் அடுக்குமாடி பண்டகசாலை தொகுதி இருக்குமிடத்தில்இருந்த அலெக்சான்ரா செங்கல் சூளையில் அமைந்திருந்த கோயிலின், மொத்த பரப்பளவு 460 ச.அடி. இந்தவேலிக்குள் பலகை வீடு ஒன்று இருந்தது. அதில்தான் கோயில் குருக்கள் இருந்தார். கோயிலுக்கு தென் கிழக்கில்சுமார் 100 அடி துரத்தில் முனிஸ்வரர் சன்னிதி அமைந்திருந்து.
கோயிலும் சரி, சன்னிதிலும் சரி, கலை வேலைப்பாடுகள், சிற்பவேலைப்பாடுகள் இல்லை. பசீர்பாசாங் சாலையிலிருந்து300 அடி தூரத்தில் இருந்த கோயிலுக்கு ஒன்றை அடி பாதை சென்றது. அதுதான் கோயிலை அடைவதற்கான வழி.சுற்றிபுற அமைப்பு நூதனமான ஒன்றாக இருந்தது. கிழக்கே சுமார் 300அடி துரத்தில் ஒரு பள்ளி வாசல், தென்கிழக்கே150 அடி தொலைவில் ஒரு பெண்டிஸ்கோஸ்ட் தேவாலயம் பின்னால் 30 அடிக்கு அப்பால் ஒரு சீ னக் கோயில்.வடமேற்கில் சுமார் 60 அடி தூரத்தில் ஒரு மெதடீஸ் தேவாலயம். அனைத்தும் அலெக்சான்ரா செங்கல் சூளைவட்டாத்தில் அமைந்திருந்தது, இந்த ஆன்மீக இல்லங்கள் அனைத்தும் பல்லாண்டு காலம் உண்மையான சகிப்புதன்மையுடன் இயங்கி வந்தன.
ருத்ர காளியம்மன் ஆலய வரலாறு பற்றிய தகவல்படி இக்கோயில் 1913-ஆண்டில் பலகை கட்டிடமாக,சிறிய அமைப்பில் உருப்பெற்றது. சூளையில் பணி புரிந்து வந்த திரு.லட்சுமணன் நாடார் என்பார்தான்இவ்வாலயம் தோன்ற காரணமாக இருந்தார்.1923-ல் அலெக்சான்ரா செங்கல் சூளையில் தாய் நிறுவனமானபோர்னியோ கம்பெனியின் ஆதரவில், செங்கற் கட்டிடமாக மாறியது. இக்கோயில் பெரும்பாலும் இந்துக்களாகஇருந்த சூளையின் இந்திய ஊழியர்களுக்கும் பக்கத்து வட்டாரங்களின் வாழ்ந்து வந்த இந்துக்களுக்கும்வாடிக்கையான வழிப்பாட்டு இல்லமாக இருந்து வந்தது. அக்காலத்தில் பாசீர் பாஞ்சாங், அலெக்சன்ரா,தெலுக் பிளாங்கா வட்டாரங்களில் வேறு இந்து கோயில் அமைந்திருக்கவில்லை. கோவிலுக்கு அருகில்அமைந்திருந்த ஆலயம் நான்கு மைல் தூரத்தில் இப்போது அமைந்திருக்கும் சவுத் பிரிட்ஜ் சாலையில்அமைந்திருந்த மாரியம்மன் ஆலயமே.
கோயில் அலுவல்களை திரு.லட்சுமணன் நாடாரே கவனித்துவந்தார். அதற்கு பின் 1960,1963,1967,1969ஆண்டுகளில் பல நிர்வாகத்தின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. செங்கல் சூளை இந்து ஊழியர்கள்,பக்கத்து வட்டார இந்து பெருமக்கள் ஆகியோரின் நன்கொடைகளைக் கொண்டுதான் கோயில் இயங்கி வந்தது.முதலில் போர்னியோ கம்பெனியாரும், பின்னர் அலெக்சான்ரா சூளை நிருவாகத்தினரும், 1967 முற்பகுதி வரைபல்லாண்டு காலமாக கோயிலுக்கு மாதம் 10 வெள்ளி நன்கொடை அளித்து வந்தனர். செங்கல் சூளையில் இந்துஊழியர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கிய போது, பாசீர் பாஞ்சாங் மின் நிலைய இந்து ஊழியர்கள்நல்லாதரவு நல்கினர். இருப்பினும் 1967 ஜுன் மாதத்திற்குப் பின்னர் ஆலயத்தை நடத்துவதற்கு பணபற்றாகுறை ஏற்பட்டது.
1968 ஆம் ஆண்டு 11-ஆம் நாள் ருத்ர காளியம்மனின் சுதைசிலைக்குப் பதிலாக புதிய கருங்கல் சிலைஸ்தாபனம் செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. 1969 அக்டோபர் 23-ஆம் நாள் புதியகருங்கல் சிலையாக விநாயகர், சுப்ரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஈராண்டுகளுக்குப் பின் 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் நாள், அலெக்சாண்ரா செங்கல் சூளை நிர்வாகத்தினர்,தங்கள் நிலத்தைச் சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவனத்திடம் விற்றுவிட முடிவு செய்தனர். 1972 ஜூன் 30 ஆம்நாளுக்குள் வெளியேறிவிட வேண்டுமென்று அறிவிப்பு கொடுத்தனர். இழப்பீடாக 260,000 சிங்கப்பூர் வெள்ளிகொடுக்கப்பட்டது.
1977-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்போது ருத்ரகாளியம்மன் அமைந்திருக்கும் டெப்போ சாலையில்2000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ருத்ர காளிம்மன் ஆலயம்எழுப்புவதற்கு கொள்கை அளவில் கொண்டு, கல்வி,கலாச்சார,சமுதாய மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளுடன் கூடிய ஆலய அமைக்க முடிவு செய்யப்பட்டு,மாமல்லபுர கட்டிடக்கலை சிற்பக் கல்லுரி முதல்வர் திரு.வி.கணபதிஸ்தபதி பழைய கலை அம்சத்துடன் நவீனத்தையும்இணைத்து ருத்ர காளியம்மன் ஆலயம் எழுந்தது.
65 அடி இராஜகோபுரத்துக்கான திட்டம் 2002-ஆம் மே மாதம் அனுமதிக்கப்பட்டு, 2003-ஆம் ஆண்டு முடிவடைந்தது.1-9-2003 –ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் வழிபடசிறந்த வசதிகளையும் உகந்த சுற்று சூழலையும்உருவாக்கி கலை நயமிகுந்த ஆலயமாக மிளிர்கிறது.
படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் எனப்படும் ஐந்து தொழில்களில் நான்காவதுஇடம் பெறும் மறைத்தல் என்பது ஜீவன்களை உய்விக்க தேவைப்படுகிறது.இதுவே திரோதானம்என்று பெயர் பெறுகிறது. இந்தச் திரோதானச் சக்தியிலிருந்து இச்சா சக்தி, ஞான சக்தி,கிரியா சக்தி தோன்றுகின்றன. மனிதர்கள் ஆணவம்,கன்மம், மாயை, என்ற மும்மலங்களுடன்இருக்கின்றார்கள். இவர்களின் மும்மலங்களையும் நீக்கி அவற்றின் சித்தமலம் அறுவித்து சிவமாக்கிஆட்கொள்ள வேண்டும் என்பதே சிவத்தின் செயலாகும்.
இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்திகளையும் உமாமகேசுவரனின் ஒரு பாகமாக விளங்கும்உமையாளாகப் பாவித்து சைவர்கள் வழிபடுகிறார்கள். இவ்விதம் சக்தியோடு கூடிய சிவனாரை வழிபடுவர்கள்உலகில் எல்லா நலனும் பெற்று வாழ்வார்கள் என்பதால் ருத்ர காளியம்மன் ஆலயத்தில் சிவனுடன்சக்தியையும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் தெட்ச்சிணா மூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மாஆகிய கலைமிகுந்த சிற்பங்களும் இவ்வாலய பிரகாரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மற்றும் ஆலய விமான கோபுரங்களில் சிவபெருமான்,மாகவிஷ்ணு, பிரம்மா ஆகியசிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலய முன்புறத்தில் கயிலை மலையில் காட்சிதந்த சிவபெருமான்,சக்தி, விநாயகர், முருகப்பெருமான் ஆகிய சிற்பங்களும்அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாலயம் ருத்ர காளியம்மன் வாயுபாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த வாயுக்கு அதிபதியானவர் காளாஹஸ்திரி. இதை வழிபடுவோர்சகலவிதமான நன்மைகளும் பெருவர்.
ஆலய முகவரி:-
SRI RUTHRA KALAIAMMAN TEMPLE,
100, Depot Road,Singapore. 109670
Tel. 62737470
Fax.62735843
- கிருஷ்ணன்,
சிங்கை.

Monday, July 23, 2007

ஸ்ரீ சிவன் ஆலயம்

Sivan Tample (Gelang)

ஸ்ரீ சிவன் ஆலயம் (கேலாங்)

ம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹிதந்நோ
ருத்ர பிர்ஜோதயாது

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்கசோதியே துலங்கும் எண்தோள் சுடர்மழு படையி னானேஆதியே அமரர்கோவே அணியணா மலையு ளானேநீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே அப்பர்பெருமான் –
( ஓதற்குரிய மந்திரத்தால் ஓதி, மலர்கள் தூவி, உமையவள் பங்கனாய் மிக்கசோதியாய் விளங்குபவனே! ஒளி பொருந்திய கூர் மழுப்படையைத் தாங்கியவனே !ஆதியே ! அமரர்க்கரசே ! அணி அண்ணாமலை
யுள்ளானே !உமக்கும் ஆன்மாவுக்கும் உள்ள நெருங்கிய உறவான யானும் உன் நினைவிலேயேஇருப்பதன்றி வேறேதும் நினைவற்றவனாயுள்ளேன் ! )

மெய்ப்பொருள் ஒன்று. அதனைப் பல்வேறு பெயர் கொண்டுஅழைக்கிறார்கள்.இம் மெய்பொருளைப் பல்வேறு மதத்தவர் பல்வேறுபெயர் கொண்டு வணங்குகிறார்கள்.விஞ்ஞானத்தினால் கூட அணுக முடியாதஇப்பெரும் சக்தியைப் பரப்பிரம்மம் என்கிறது வேதாந்தம்.பல்வேறு கிளை நதிகள் வெவ்வேறு திசையில் உற்பத்தியாயினும்இறுதியில் கடலில் சங்கமாவது போல்
இம்மதங்கள் யாவும் ஆதியும்அந்தமுமற்ற ஒரு மெய்ப்
பொருளையே சார்ந்து நிற்கின்றன. சிவம் அடிமுடி காணாத
பொருள்.

''தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...'' எல்லா நாட்டவராலும் கடவுள் என போற்றப்படுபவரைச்
சிவன் எனப் போற்றித் துதிக்கிறது.
இந்துமதத்தின் முக்கிய பிரிவுசைவசமயம். குணமும் குறியும்
கடந்த இறைவன் நமக்கு அருள் செய்வதற்கும்,நற்
சிந்தனைகளை வழங்கவும் பல அருள் மூர்த்தங்கள்
தாங்கி அருள்பாலித்து வருகிறார். ஆலயங்களில் சிவ
வழிபாட்டிற்குரிய சின்னமாய் கருதப்படும் அருவுருவ
வடிவில் சிவனேஎழுந்தருளியுள்ளார் ஆவுடையார் என்னும்
கீழ்ப்பகுதி சக்தியின்சின்னம். அதிலுள்ள லிங்கம் சிவத்தின்
சின்னம். சிவசக்தியின்ஐக்கியத்தால் சராசரங்கள் யாவும் தோன்றியுள்ளன என்பதை இச்சின்னம் குறிக்கிறது.

காமம் அகன்று சிவஞானத்தோடு கூடிய பக்தி உண்டாகஞானக்கண்ணோடு கூடிய முக்கண்ணராக மாந்தர் ஆகவேண்டும்என்னும் கருத்தை முக்கண்ணன் வடிவத்தி
லிருந்து சிவபெருமான்விளக்குகிறார்.ஆணவம், கன்மம், மாயை
என்னும் இருளிலிருந்து,உறக்கத்திலிருந்து விடுபட்டு, துயிலெந்து
இந்த ஆன்மா இறை அருளில்தோய்விப்பதே சிவம்.உருத்திரன்
என்னும் உக்கிர சொரூபம்மூலம் பயத்தையும், அஞ்ஞான
இருளையும் மரணத்தைப் பற்றிய அச்சத்தையும்போக்குகிறார்.
கேடுகளை ஏற்றுக்கொண்டு நலன்களைஉலக மக்களுக்கு
அளிப்பதை நீலகண்டன் வடிவலிருந்து உணர்த்துகிறார்.
இறைவனுடைய நடராஜ வடிவமானது இறைவனின் ஐந்
தொழில்களையும் மக்களுக்கு உணர்த்துகிறது. உடுக்கை ஏந்தியகையானது படைத்தல் தொழிலையும், அபயகரமானது காத்தல்தொழிலையும், அக்கினி ஏந்திய கை அழித்தலையும்,
முயலகன் மீதுஊன்றிய திருப்பாதம் மறைத்தலையும், தூக்கிய திருப்பாதம்அருள் அலையை குறிக்கிறது. அடிமுடி தேடிய
கதையானது இறைவன் ஆதியும்அந்தமும் இல்லாத
அருட்பெருஞ் சோதி என்பதையும்மட்டுமல்லாது பரம்
பொருள் உருவம் உடையதாகவும் உருவத்தைக் கடந்த
நிலையிலும் உள்ளதென்பதையும் விளக்குகிறது.

பிரதோஷம்,மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரைசிவனுக்குரிய
முக்கிய விரத நாட்களாகும். பிரதோஷம் பதினைந்துநாட்களுக்கு
ஒரு முறையும், சிவராத்திரி மாசி மாதத்திலும்,திருவாதி
மார்கழி மாதத்திலும் வருபவை. சிவ வழிபாடானதுஆதி
காலந்தொட்டே நிகழ்ந்து வருவதை,சிந்து வெளி நாகரீகஅகழ்வாராய்ச்சிகள், மகாபாரதம்,இராமாயணம் போன்ற புராணகால இதிகாசங்கள் சங்கம் மருவிய கால நூல்களான சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்றவைகள் சான்று பகர்கின்றன.ஆகவே அழகில் சோதியன் அம்பலத்தாடு
வானை வாழ்த்தி வணங்கி பிறவிப் பயனை அடைவோமாக.

சிவலிங்க வழிபாட்டிற்கென்றே முக்கியத்துவமளித்து1850-ல் தொடங்கப்பட்டது இந்த சிவலாயம். நகர சீரமைப்பின்
காரணமாக இவ்வாலயமும் மூன்று முறை இடம்
பெயர்ந்துள்ளது. சிவன்கோயிலின் வரலாறும், வளர்ச்சியும் சிங்கப்பூரின்வரலாற்றோடும், வளர்ச்சியோடும் பின்னிப் பிணைந்தவையாகும். ஆகவேசிவன் கோயிலின் வரலாற்றைப் புரிந்துகொள்ளசிங்கப்பூரின் வரலாற்றுப் பின்னணியையும் தென்கிழக்காசியாவில்,குறிப்பாகச் சிங்கப்பூரில், சைவத்தின் வளர்ச்சியையும்சுருக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியம்.
சிவன் கோயில் தோற்றம்......!

இந்திய மாநிலங்களான தமிழ் நாடு, பீகார், உத்திரப்பிர
தேசங்களிலிருந்து இந்தியர்கள் சிங்கப்பூர் வரதொடக்கினார்கள்.
பீகார், உத்திரப் பிரதேசம் ஆகியஇடங்களிலிருந்து வந்த
பால்காரர்கள் சைவப் பற்று மிக்கவர்கள்.இவர்கள் மண்மலை
(தற்போது பொத்தோங் பாசிர்] என்று அழைக்கப்பட்ட இடத்தில்
உள்ள மெய்யப்பச் செட்டியார்எஸ்டேட்டில் குடியேறினர்.
தற்போது சிவன் கோயிலில் உள்ள லிங்கத்தை இவர்களே காசியிலிருந்து கொண்டு வந்துஅங்கு முதன்முதலில் நிறு
வினர் என்று சிலர் நம்புகிறார்கள்.இரண்டாம் உலகப்
போருக்கு பின்னர் மூன்று ஆண்டுகள்இக்கோயிலில்
குடியிருந்த ஒலிப்பரப்பாளரும், நீதிமன்ற மொழிபெயர்ப்
பாளருமான திரு.டி.எஸ். நாராயண ஐயர்இவ்வாறு
நம்புகிறவர்களில் ஒருவர். சிவன் கோயில் மண்மலை
எனும் பொத்தோங் பாசிரில் முதன்முறையாகநிறுவப்பட்ட
இந்த லிங்கம் டோபிகாட்டின் கீழ்கோடிக்கும்,பிறகு இப்போது
உள்ள மெக்டோனால்ட் ஹவுஸ்எனும் கட்டடத்திற்கு அருகில்
உள்ள இடத்திற்கும்,பிறகு எம்.ஆர்.டி எனும் விரைவு இரயில் நிலையம்அமைந்திருக்கும் இடத்திற்கும் மாற்றம் கண்டு,
இறுதியாக தற்போது அமைந்திருக்கும் கேலாங் வீடமைப்பு
பேட்டைக்கு மாறியது.

லிங்கத்தைக் கொண்டு வந்த அதே கப்பலில் பயணம் செய்த பால்காரர்களும் சிப்பாய்களும் தங்கள்நீண்டபயணத்தின் போது
அதை ஒவ்வொரு நாளும் மெருகேற்றியதாகவும் அதனால்தான்
லிங்கம் பளிங்குபோல் பளபளப்பாக உள்ளது என்றும் சிலர் கூறியுள்ளனர். திரு.நாராயண அய்யரும் இதைக் கேள்விப்பட்டுஇருக்கிறார். சிவபெருமானின் லிங்க
வடிவம் பரமேஸ்வர மன்னர் காலத்திலிருந்தே
சிங்கப்பூரில் இருந்துவந்திருப்பதாகத் தமது மூதாதையர்
கூறக் கேள்வியுற்று இருக்கிறார்கள். ரா·பிள்ஸ் வருவதற்கு முன்னரேலிங்க வழிபாடு சிங்கப்பூரில் இருந்து இருக்கிறது.
இதற்குச் சான்றாக பழைய ஆர்ச்சர்ட்ரோடு வரைப்படத்தில் சிவன் கோயில் குறிக்கப்பட்டுகிறது.

·பீரி பிரஸ் [Free Press] எனும் சிங்கப்பூர்செய்தி தாளில்
1960-ம் ஆண்டு பிரதி ஒன்றும் இந்தக்கோயில் லிங்கம் சிதம்பரத்திலிருந்து ஒரு சமய பெரியாரால் கொண்டு
வரப்பட்டது எனவும் தெரிவிக்கிறது.

இந்த கோயில் லிங்கத்தின் மூலம் எதுவாக இருப்பினும்
ஆர்ச்சர்ட் ரோடு ஆலயத்தில் 1850 க்கு முன்னரேவழிபட்டு
வரப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.1850 -களின்
தொடக்கத்தில் ஆச்சாட் ரோடுகோயில் சீரமைப்பு செய்து
மறுபடியும் கட்டப்பட்டது என்று தமது நூலில் டர்ன்புல் கூறுகிறார்.அந்நூலாசிரியர்கூறுவதாவது 1830 ஆர்ச்சர்ட்
ரோட்டிலுள்ள சிவன் கோயில் உறுதியான கட்டிட
அமைப்புடன் 1850 களின்தொடக்கத்தில் மீண்டும் கட்டி
முடிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள பழைய உறுதியன்ற தற்காலிக வழிபாட்டு
இடங்கள் உறுதியான கட்டடங்களாக உருவாக்கப்பட்டன.
(இக்காலக்கட்டத்தில் மற்ற சமயங்களின் வழிபாட்டுத்
தலங்களும் தோன்றியுள்ளன.ஆர்மோனியன் தேவாலயம்
1835 லும் செயிண்ட் ஆன்ட்ரூஸ் தேவாலயம் 1836 லும் கட்டப்பட்டன.தெலுக்காயர் உள்ள தியான் ஹொக் கியோங்
எனும் சீனக்கோயில் 1842-ல் முழுமையடைந்தது.முதல்
பள்ளிவாசல் கம்போங் கிலாமில் 1842-ஆம் ஆண்டும்,யூத
இனத்தவரின் முதல் வழிபாட்டுஇடம் 1845 லும் கட்டப்பட்டன.)
சிவன் கோயில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மற்ற
சமூகத்தினர் கட்டியசிவன் கோயில்களுக்குத் தனிப்பட்ட முறையில்தாராளமாக நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.
அப்படிப்பட்டவர்களில்இக்கட்டுரையில் பின்னர் குறிப்பிடப்
படும் நாகப்பசெட்டியாரும் ஒருவர்.சமூகம் என்ற வகையில்
தங்களின் சமய குருமார் கூறிய மற்றெரு ஆலோசனை
களையும்செட்டியார்கள் பின்பற்றினர். அதாவது சிவன்
மட்டும் தனியாக உள்ள கோயில்களில் அம்மனையும்
இடம்பெற செய்யவேண்டும் என்பதே அது.திருவையாறு
போன்ற திருத்தலங்களில் அவர்கள் அந்த ஆலோசனை
யையே பின்பற்றியுள்ளனர்.சிங்கப்பூர் சிவன் கோயிலில்
அம்மன் இல்லாததைக் கண்ட அவர்கள் முகலாயப்
படையெடுப்புக்குப் பிறகு காசியில்தாங்கள் நிறுவிய விசாலாட்சி அம்மனைப் போல இங்கும் விசாலாட்சிஅம்மனை நிறுவினர்.
இக்கோயிலில் உள்ளவிசாலாட்சி அம்மனுக்கும் செட்டியார் சமூகத்திற்கும் உள்ள பிணைப்புசிங்கப்பூர் செட்டியார் கோயிலில் அறக்கட்டளையின்குறிப்பேடுகளில் பிரதிப்பலிக்கப்பட்டு உள்ளது.
இக்கோயிலின் அம்மன் சந்நிதானத்தைச் சீர்செய்தல்,புதுப்பித்தல் போன்றவற்றிக்கும் ஏற்படும் செலவைசெட்டியார் கோயில் அறக்கட்டளை அவ்வப்போது ஏற்று வந்துள்ளது.1964-ம் ஆண்டில் அம்மன் சந்நிதானத்தைப்புதிதாகக் கட்டியபோது அதற்கான
செலவினை இந்து அறக்கட்டளை பொறுப்பேற்றுப் புதிய
கேலாங் கோயில்கட்டுவதற்கு நன்கொடை கொடுத்ததோடு
அம்மன் கருவறை விமானக் கலசத்திற்கு தங்கமுலாம் பூசும் செலவிற்கும்நன்கொடை கொடுத்துள்ளது.
விசாலாட்சி அம்மன் திருமேனி எப்போது நிறுவப்பட்டது
என்பதற்குச் சான்று எதுவும்தற்சமயம் கிடைக்கவில்லை.
திரு.நாராயண அய்யரின் நினைவிற்கு எட்டுவதெல்லாம்
தான் முதன் முதலில் 1936-ல்கோயிலுக்குச் சென்றபோது
அங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதி இருந்தது என்பது மட்டுமே.

கோயில் மறுசீரமைப்பு......!

கோயில் வளர்ச்சியின் அடுத்த கட்டிடம் 1898-ஆம் ஆண்டில்
நகராட்சி துறை பொறியிலாளர் எஸ் டாம் லின் சன்என்பார்
சமர்ப்பித்த ஆர்ச்சர்ட் ரோடு சிவன் கோயில் மறுசீரமைப்பு
எனும் திட்டத்துடன் தொடங்கியது.கோயிலின்மறுசீரமைப்பு
பணி பூர்த்தியடைவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தது.
திரு.நாகப்ப செட்டியார் என்பவரும் அவரின்துணைவியாரும்
தங்கள் சொந்த பணம் கொண்டும் உள் நாட்டு இந்துகளின்
நன்கொடை கொண்டும்கோயிலைக் கட்டினர்.

1961-.ஆம் ஆண்டில்தான் கோயிலின் மறுசீரமைப்பு பணி
தொடங்கியது. கட்டடத்தில் உள்ள சாந்துக்கலவையைத்
தொழிலார்கள் உளியால் செதுக்கி அகற்றும் பணியில்
ஈடுப்பட்ட வேளையில், மே 13 தேதி ஸ்ட்ரெயிட்ஸ்டைம்ஸ்
ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர் ஒருவர் கோயிலுக்குச் சென்றார்.
நந்தி சிலைக்குப் பின்னால் உளியால்செதுக்கப்பட்ட இடத்தில்
தமிழ் எழுத்துக்கள் குறிக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். கல் வெட்டுக்களில் இருந்தவாசகத்தை அப்போது அங்கு இருந்த
கோயில் அர்ச்சகர், ‘’நாகப்ப செட்டி, தேனாச்சி 1821-ல் சனவரி 23இக்கோயில் திருப்பணி செய்திருக்கிறனர்’’ என்று மொழி பெயர்த்துகூறியிருக்கிறார்.
கோயில் 1821-ல் முதன்முதலில் கட்டப்பட்டதாகவும் ஆகவே சிங்கப்பூரிலுள்ள இந்து வழிப்பாடு இடங்களில் அதுவே
பழமையானது எனவும்மறுநாள் பத்திரிக்கையில் செய்தி ஒன்று பிரசுரமானது. அதேபத்திரிக்கையில் அபு பின் ஆதம் எனும் புனைப்பெயரில்வரலாற்று கட்டுரைகளை எழுதி வந்த மற்றொரு நிருபரின் ஆர்வத்தை இது தூண்டியது. அவர் சில நாட்களுக்குப்
பிறகு கோவிலுக்குச் என்று பார்த்த போது நந்தி இருந்த செங்கல் மேடை முழுமையாக இடிக்கப்பட்டு தமிழ் எழுத்துக்கொண்ட
கல்வெட்டு கீழே இருக்கக் கண்டார்.அப்போது முன்பு
மறைந்திருந்த முதல் வரி உட்பட அதிலிருந்தவாசகம் முழுதும் தெரிந்தது.
’1899 அல்லது சாலிய வாகன வருடம்1821 சனவரி 23 ‘’என்று அது தொடங்கியது.அங்கிருந்த அர்ச்சகர் அதில் குறிப்பிட்ட 1899-ஆம் ஆண்டைக்குறிப்பிடுவதாக தெரிவித்தார்.அவர் கூறியது சரியே.
ஆங்கில ஆண்டு கணக்கிற்கும் தமிழ் ஆண்டு கணக்கிற்கும் 78
ஆண்டு இடைவெளி உண்டு.

முதல் திருகுட நன்னீராட்டுக்குப் பின், மறுசீர்அமைக்கப்பட்ட
கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழா1905 -ஆம் ஆண்டு
பிப்பரவரி 9 வியாழக்கிழமை நடைபெற்றதுள்ளது.இத்தகவல்
ஒரு வெள்ளி தகட்டில் எழுதப்பட்டுலிங்கத்தின் கீழ் வைக்கப்
பட்டு இருந்தது.1964-ஆண்டில் நடைபெற்றநன்னீராட்டு விழாவின்
போது பீடத்திலிருந்துலிங்கத்தை அகற்றியபோது தகட்டிலுள்ள வார்த்தைகள் படிக்கும் வகையில் தெளிவாக இருந்தன. இந்துஅறக்கட்டளை வாரியத்தின் ஆணையாளர்களின் ஒருவரும்,வாரியத்தின் நிர்வாகத்திலுள்ள நான்கு கோயில்களின்தலைவருமான திரு. வி,பக்கிரிசாமி
பிள்ளை அந்த செப்புத் தகட்டில்இருந்ததை எழுதி வாரியத்தின் கோப்பில்பாதுகாத்து வைத்துள்ளார்.

இரண்டாம் போரின் போது (1940 –1942) சிலர்கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர்.கோயிலைச் சுற்றி விழுந்தகுண்டுகள் கோவிலையும்,சிலைகளைச் சேதப்படுத்தின. சேதமடைந்த
சிலைகளின் புகைப்படங்கள் கோப்பிலிருந்ததால் அப்படங்
களைக் கொண்டு உள்ளாட்டு சீனக் கொத்தனார் ஒருவர்
புதிய சிலைகளை உருவாக்கி கொடுத்தார்.கோவிலை
புதுப்பிக்க திரு,பக்கரிசாமி பிள்ளையும், திரு.பி.கோவிந்தசாமி செட்டியாரும் நிதி திரட்டினர்.
1943 -ஆம் ஆண்டு ஜூலை 9-ந் தேதி ஒரு திருகுட நன்னீராட்டு
விழா நடத்தப்பட்டுள்ளது.
1943-1983 இடைப்பட்ட காலம் இடர் நிறைந்த காலமாக அமைந்தது.சன்னிதானங்கள் பாதிப்புஅடைந்து இருந்தது.
சிங்கப்பூர் துரித வளர்ச்சியின் காரணமாக,ஆர்ச்சர்ட் சாலை விரிவுப்படுத்த வேண்டும்எனும் காரணத்தால் 1954-ல் நகராட்சி ஆணையாளர்கள் கோயில் சாலையில் இருந்து 14 அடிதள்ளிஅமையவேண்டும் எனக் கேட்டுகொண்டனர்.
நீண்டகாலப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு சமரசம் ஏற்பட்டது.கோயிலின் முன் பகுதியில் உள்ள 490 சதுர
மீட்டர் நிலத்தை விட்டுக் கொடுக்கப்பட்டதுடன் அதே
இடத்தில் கோயிலை மீண்டும் கட்டவும் அனுமதியளித்தது.
இழப்பீடாக ஐம்பதாயிரம் வெள்ளி அரசாங்கம்கொடுத்தது.
உள்ளூர்ச் சீனக் கட்டுமான குத்தகையாளர்கள் மூலம்
கட்டுமானப் பணிகள் ஏப்ரல் 1962-ஆண்டு முடித்தனர்.
மாரியப்ப ஆசாரி என்பவரும் அவரின் குழுவினரும் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்தனர்.

1983-ல் எம் ஆர் டி எனும் விரைவு இரயில் நிலையத்திற்குக்
கோயில் அமைந்திருந்த நிலத்தைப்பற்றுமானம் செய்ய
அரசாங்கம் முடிவு செய்தது. இழப்பீடாக 406,440 வெள்ளி கொடுக்கப்பட்டது. கோயிலைமீண்டும் கட்டுவதற்குப்
பொருத்தமான இடத்தைத் தேடிய வாரியம் கேலாங்கி
லுள்ள ஒரு இடத்தை 1983சனவரி 10-ல் தெரிவு செய்தது.

இந்து அறக்கட்டளை வாரியமும் சிவன் கோயில் நிர்வாகக்
குழுவினரும் புதிய கோயிலின் வடிவமைப்பைத்தென் இந்திய,
வட இந்தியா பாணியிலான கோயில் வடிவிலான கட்டட
அமைப்புடன், புதிய எண் கோண்வடிவில் உருவாகியது.
3000 ச.மீட்டரில் புதுக்கோயில் தோற்றத்திலும்,வடிவிலும்,
வசதிகளிலும் புதுமைமிக்கஆலயமாக அமைந்துள்ளது.

ஆலயத்தின் முக்கிய விழா நிகழ்ச்சியாக மகா சிவராத்திரி,வசந்த நவராத்திரி, குரு பெயர்ச்சி மற்றும், சமயவிழாக் கால நிகழ்வும் நடைபெறுவருகின்றன.

(சிங்கப்பூரில் அமைந்திருக்கும் ஆலயங்களில் சிவன் ஆலயம்ஒன்றாகும். 1830-ம் ஆண்டு முதலே அதன் வரலாறு தொடக்கம்இருந்து வந்துள்ளது. இது நம்மவர்கள் சைவத்தின் மீதுகொண்டுள்ள ஆன்மீக உணர்வை புலப்படுத்துகிறது.

எத்தகைய துன்பம்,இடர்கள் வந்தபோதும் கொண்ட கொள்கையில் தளர்வில்லாது இருந்தவர்கள் தமிழர்கள்.சிவன் ஆலயத்தின் வரலாறு, ஆணி வேர், சல்லி வேர்என்று ஆய்ந்தெடுத்து குறிப்புகளைத் தந்தவர் சிங்கப்பூர் பழனியப்பன்ஆறுமுகம். ஓய்வு நாளான ஞாயிற்று கிழமைகளில் கூட ஆலயகிடங்கில் [Store Room] புகுந்து ஆவணங்களை திரட்டி, அதற்குசான்றாக நூல் நிலையம், மரபு காப்பு நிலையங்களில்உள்ள பழைய குறிப்புகள், வரைப்படங்களை தேடி எடுத்து வெளிச்சத்திற்குகொண்டு வந்தார். இச்செயலில் அவரின் உள்ளார்ந்தஆன்மீக உணர்வையும், சமுதாய அக்கறையையும் நம்மால் உணர முடிகிறது.அதோடு தான் வாழும் நாட்டைப்பற்றி சிங்கப்பூர் வரலாற்றையும் இடையிடையே சொல்லியுள்ளார்.சிங்கப்பூர் ஆலயங்களைப்பற்றி எழுத வேண்டும் என்று நான்அவரிடம் கூறியபோது சிங்கப்பூரின் ஆரம்ப கால வரலாற்று குறிப்புகள்,ஸ்டாம் போர்ட் சிங்கப்பூர் வருகை, சிவன் ஆலயம்,சீனிவாச பெருமாள் ஆலயம்,தெண்டாயுதபாணி ஆலயம், போன்ற பழைமையானஆலயங்களின் வரலாற்று குறிப்புகள்,கும்பாபிஷேகம்மலர்களையும் கொடுத்துதவினார். இத்தருணத்தின் எனது இதங்கனிந்தநன்றியறிதலை,வணக்கத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்பார்ந்த நண்பர் சிங்கப்பூர் பழனியப்பன் ஆறுமுகம்அவர்களுக்கு.)

ந ன் றி :- சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம்.
Sri Sivan Temple - Geylang,
24, Geylang East Av.2,
Singapore. 389752
Tel. 67434566 /Fax. 67437623

ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம்.


Serangoon North -Darma Muneeswaran -1

ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம்

றைவன் படைப்பில் மனிதப் பிறப்பு உயர்ந்தது.
மாணிக்க வாசகர், ‘’எல்லா பிறப்பு இளைத்தேன்
எம்பெருமானே, இன்று இந்த மனித பிறப்பில்
உன்னைக் கண்டேன்..’’என்று மனமுருகிப் பாடுகிறார்.
இந்த மனித பிறப்பில்தான் மனிதன் ஆன்ம ஞானம்
பெற்று, அஞ்ஞானம் நீங்கி வாழ இறைவனோடு
கலந்துறைகிறான்.
தமிழர்கள் இறை உணர்வில், இறை நம்பிக்கையில் மிகுந்த
நம்பிக்கை கொண்டவர்கள்.ஆகையால்தான் தாங்கள் சென்று
குடியேறிய நாடுகளில், இடங்களில் வழிபாட்டுத் தலங்களை அமைத்துவணங்கி வந்துள்ளார்கள். அந்த இறை நம்பிக்கையின் அடிப்படையில் சிங்கப்பூரில் இந்து பெருமக்களும்,பக்தர்களும்
வழிபடப் பல ஆலயங்கள் இருக்கின்றன.`அவ்வகையில்
சிராங்கூன் வடபகுதியில் அமைந்திருக்கிறதுதரும
முனீஸ்வரன் ஆலயம்.பல்லாண்டுகளுக்கு முன்னம் ஓர்
அரச மரத்தடியின் கீழ் முனீஸ்வரனை ஸ்தாபித்துவழிபட்டு வந்துள்ளனர்.

ஆலயம் உருவாகும் முன்பே அந்த இடத்தில் வளரும் மரம் தல விருட்சம் என்று அழைக்கப்படும்.ஒவ்வோர் ஆலயத்திற்கும் தல விருட்சம் வேறுபடும். அருள்மிகு தரும முனீஸ்வரன் ஆலயத்தில் தலவிருட்சமாக விளங்குவது அரச மரமாகும்.

மரம் மானுடம் பெற்ற வரம் எனலாம். தேவலோகக் ‘கற்பகத் தரு’ கேட்டதைத் தரவல்லது என்பர்.தென்னை, வாழை மரங்கள் எல்லா பாகங்களும் பயன்படுவதால் அவற்றைக் கற்பகத் தரு என்பர். மரத்தின்பட்டைகளை உடையாகப் (மரவுரி) பயன்படுத்தினர்.மரத்தின் காய்,கனி,இலை,மரத்தண்டு,வேர் என சகலமும்பயன்படுகின்றன. இறையுணர்வு தொடர்பான நிறைய செய்திகள் மரத்திற்கு உண்டு. மரங்களில் நான்அசுவத்தமாக (அரச மரமாக) இருக்கிறேன் என்கிறான் கண்ணன் கீதையில்.

ஆலமரத்தை வியந்து மேனாட்டு அறிஞர் பிரியர்சொடானஸ் (Friar Jorgans) கி.பி. 14 ஆம்நூற்றாண்டில் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ‘இன்றும் எத்தனையோ வகையான மரங்கள் இங்குவளர்கின்றன. ஆல மரங்கள் பார்ப்பதற்கு விந்தையாக இருக்கின்றன. அவற்றின் வேர்கள் மேலிருந்து வளர்ந்துவிழுதுகளாகக் கீழே இறங்குகின்றன. அவை சிறிது சிறிதாய்கீழிறங்கி இறுதியில் நிலத்தில் புதைந்துவிடுகின்றன.நாளடைவில் அவை மரத்தின் முதன்மையான அடிமரத்தைப் போல அடிமரங்களாகவே மாறிவிடுகின்றன. அவைவளைவுகளைப் போல தோன்றுகின்றன.
இவ்வாறு ஒரே மரத்திலிருந்து இருபது, முப்பது அடிமரங்கள்ஒன்றோடொன்று இணைந்து நிற்கும் விந்தையே நாம் இங்கு காண்கிறோம். இந்த அற்புதத்தை நான்கண்டு வியப்படைகிறேன். அதைச் சொற்களால் வர்ணிப்பது எளிதன்று’ என்கிறார்.
அரசமரம் உலகத்திலுள்ள மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்குவதால் இப்பெயர் பெற்றது.தரும முனீஸ்வரன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சுமார் 80 ஆண்டுகள் பழமையான மரமாகும்.ஆலயம்அமையும் முன்னமே இந்த அரச மரத்தடியில் முனீஸ்வரர் இருந்ததாகவும்,அதன் பிறகே இவ்வாலயம்உருவாகி இருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 93 வயதுதிரு.கோவிந்தசாமி எனும் பெரியார், ‘தான் 1933-ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூர்வந்தாகவும், ஆலயம் அமைந்துள்ள ஜாலான் வி யோ பகுதியில் குடியேறியதாகவும் கூறுகிறார்.அப்போது கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ‘வெற்றிலை பாசா’ என்ற பெயர் வழங்கப்பட்டுவந்ததாகவும், நிறைய மாடுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்ததால் இந்தக்கோயிலுக்கு‘மாட்டு தாண் கோயில்’ என்று வழங்கப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இக்கோயில்அமைந்திருக்கும் இடம் இரப்பர்
எஸ்டேட்டாகவும் இருந்ததாக வாய்மொழி வரலாறாகக்
கூறினார்.
தற்போது கோயில் தல விருட்சமாக விளங்கும் அரசமரம்
பெரியவர் திரு.கோவிந்தசாமி முதன்முதலாக கோயிலைத்
தரிசிக்க வந்தபோது (1933-ம் ஆண்டு) சிறிய மரமாக இருந்தது.யாரேனும் உடல்நலக்குறைவால்பாதிக்கப்பட்டு
இருந்தால் கோயிலில் சிறிது நேரம் உட்கார்ந்து சென்றால்
உடல் நிலைசரியாகிவிடும் என்றும் தமக்கும் அப்படியொரு
அனுபவம் நிகழ்ந்தாகக் கூறினார்.
ஆலய தோற்றம்....!

1900 –இல் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 30 இந்தியகுடும்பங்கள்
எளிய முறையில் தரும முனீஸ்வரனை வணங்கி வந்துள்ளார்கள்.
செம்பவாங் இரப்பர்த் தோட்டத்தைச் சேர்ந்த சமூக தலைவர்களான அமரர் பிச்சைப் பிள்ளை, அமரர்அழகப்பன் கோனார் ஆகியோர் முயற்சியால், அப்பகுதி வாழ் மக்களின்காவல் தெய்வமாக இந்தக் கோயில் எளியமுறையில் கட்டப்பட்டது.

வளர்ந்த ஆலமரத்தினை வெட்ட முயன்றபோது ஏதோ ஒரு
சக்தி வெட்ட முடியாது தடுத்து ஆட்கொண்டகாரணத்தால்
தோல்வி அடைந்தனர். அப்போது அங்கு வாழ்ந்த குடியிருப்
பாளர்கள் பலரும், இக்கோயிலைப்பராமரித்துக் கொண்டும்,
மாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த பால்கார சின்னையாவும், பால்கார பொன்னையாஎன்ற இரண்டு பால் வியபாரிகளும் முனீஸ்வரனின் நிழலுருவைக் கண்டதாகக் கூறியுள்ளனர்.

1969-ஆம் ஆண்டு முதல் ஆலய விரிவு பணி தொடங்கி 1985
வரை நீடித்தது. இக்கால கட்டத்தில்விநாயகர், முருகன், நாகர்,
பைரவர் ஆகிய மூர்த்திகளுக்குத் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டன.

மறுகுடியேற்றம், நகர சீரமைப்பு காரணமாக மக்கள்
வீடமைப்பு பேட்டைகளில் குடிபெயர்ந்தனர்.தரும முனீஸ்
வரன் ஆலயம் அமைந்திருந்த பகுதியில் சிராங்கூன் கார்டன்,
சிராங்கூன் நார்த், சிராங்கூன்செண்டரல், அங் மோ கியோ, ஹவ்
காங், இயோ ச்சூ காங், பயலெபார், சிலேத்தார் ஹில் ஆகிய
வீடமைப்பு பேட்டை அமைந்திருக்கிறது.

இவ்வட்டார இந்து மக்களுக்கு ஏற்ற வழிபாட்டுத் தலமாக
தரும முனீஸ்வரன் ஆலயம் அமைந்திருந்தகாரணத்தால்
பக்தர்களின் வருகை அதிகரிக்கவே ஆலய மேலாண்மை
குழு இவ்வட்டார நாடாளுமன்றஉறுப்பினர் உதவியுடன்
சமய, சமூகத் தேவைகளை நிறைவேற்றும் வகையில்
ஆகம முறைப்படி திருக்கோயில்அமைக்கக் தீர்மானித்து,
சுமார் 1400 சதுர மீட்டர் அளவில் இப்போது அமைந்திருக்கும்.
இடத்திலேயே புதியஆலயம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
புதிய ஆலயத்தைக் கட்டும் பணி 11.5.98 –ல் தொடங்கி 1999- ம்ஆண்டு நிறைவடைந்தது. ஏறத்தாழ 3.5 மில்லியன் செலவில் கம்பீரமான ஆலயம் எழுந்தது.

மூலவர் தரும முனீஸ்வரர் வடக்கு முகமாக ஆலயத்தின்தென்பகுதியில் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.முனீஸ்வரர் சன்னிதான விமானத்தின் எண்கோண வடிவமைப்பில் இருக்கிறது. ஓடுகளால் வேயப்பட்ட கூரையில்தங்க முலாம் பூசிய 36 திரிசூலம் உள்ளது.
இராஜகோபுரத்தின் இரண்டாவது தள விமானத்தில்
சுதையிலானசகல சிற்பங்களும், முனீஸ்வரர் சிற்பம்,
சிவபெருமானின் தனித்த சிற்பங்களும்,, மூன்றாவது
கோபுரம் தளத்தில்மாரியம்மன், முருகன், விநாயகர்,
இராமர், சீதை, இலட்சுமணன், அனுமன், கங்காள மூர்த்தி,
பைரவர் ஆகியசுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.

புனித மரமான அரச மரத்தின் கீழ் தென்புறம் தொன்றுதொட்டு
வழிபட்டு வந்த நாகர் சன்னிதி நான்குகால் மண்டபமாக
விமானத்துடன் அஷ்ட நாகங்கள் சிற்பமாகவும் அமைக்க
பெற்றுள்ளது. சிங்கப்பூரில் அமைந்திருக்கும்ஆலயங்களில்
பெரிய அளவில் அமைந்திருக்கும் நாகர் சிலை இதுதான்.
ஏற்கனவே ஆலயம் இருந்த இடத்திலேயே, அரச மரத்தைச்
சுற்றி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. விநாயகர்,முருகன், நாகர், முனீஸ்வரன், ராமர், கங்காளமூர்த்தி, மாரியம்மன்,பைரவர்
ஆகிய மூர்த்திகளுக்குச் சன்னிதானங்கள்அமைக்கப்
பட்டுள்ளன.

பல் நோக்கு கொண்ட மண்டபம், நூலகம், வகுப்பறைகள்,ஊழியர் வசிப்பிடம் போன்றவைகள் நவீன முறையில்முறையில் கட்டப்பட்டுள்ளன. சமூக நடவடிக்கைகள், மருத்துவம், சட்ட
தொடர்பான ஆலோசனைகளும் இங்குவழங்கப்படுகின்றன.

முக்கிய விழாக்கள்.இவ்வாலயத்தில் முக்கிய விழாக்களாகச் சித்ராபெளர்ணமி, வைகாசி விசாகம், ஆடி மாத பூஜை, ஆவணிமாத விழா,புரட்டாசி, நவராத்திரி விழா, ஐப்பசி மாத விழா,கார்த்திகை, மார்கழி மாத விழா, மாசிமகம், பங்குனிமாத விழாக்கள் போன்ற விழாக்களும், பூஜைகளும் நடைபெறுகின்றன.


ஆலய முகவரி:-
Darma Muneeswaran Temple,

57, Serangoon North Ave.

1Singapore. 557 430

Tel :62805058 / Fax. 62803227

ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம்


SRI KRISHNAN TEMPLE


ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம்
ண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை’ என்று ஆண்டாள் நாச்சியார்திருமொழியில் பாடுகிறார். அண்டர் குலத்து அதிபதியான விஷ்ணு என்ற பரம்பொருளின் எட்டாவதுஅவதாரம் கிருஷ்ணாவதாரம். தர்மத்தை நிலைநிறுத்திஅதர்மத்தை வீழ்த்திய அற்புத அவதாரம் பாரதப்போர் விளைக்கவும், பூமியின் பாரம் தீர்க்கவும்,கிருஷ்ண உணர்வுகளை இவ்வுலகில் பரப்பவும் வடமதுர சிறையில் நாராயணன் வந்துபிறந்தான்.
கோகுலம்,பிருந்தாவனம், துவாரகை, விராடபூமி, அஸ்தினாபுரம்,குருஷேத்திரம் ஆகிய இடங்கள் கண்ணனின்
லீலைகள் கண்ட தலம்.
திருமாலின் அவதாரங்களிலேயே மிகச் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணாவதாரம்வெறும் தத்துவங்களை
மட்டும் சொல்லவில்லை.
மனித வாழ்வோடு இணைந்து நிற்கிறது.கோகுலத்துக் குழந்தை கண்ணன்,ஆயர்பாடியில் கோபியர்களோடு காதல் பொழிந்த கோபாலகிருஷ்ணன், துவாரகையில் மன்னன் கிருஷ்ணன், பராதப்போரின் சூத்ரதாரி கண்ணன் என்று குழந்தைப்பருவம்
தொடங்கி, நீதியின் வெற்றிக்காக சாரத்தியம் செய்தது வரை
கிருஷ்ணன் செய்த ஒவ்வொருசெயலிலும் மனித
வாழ்வின் துடிப்பும்,பொருளும்,தத்துவமும்ஊடாடி
நிற்கிறது.அது மனித வாழ்வில் ஏற்றுக்கொள்ளகூடிய
யதார்த்தமாக மலர்ந்து மணம் வீசுகிறது.

1870- ஆம் ஆண்டு வாக்கில் தோற்றம் கண்ட ஆலயம்
கிருஷ்ணன் ஆலயம்.சிங்கப்பூரின் மத்திய வட்டாரப்
பகுதியில் அமைந்துள்ள சாலைகள் பிராஸ் பசா சாலை
(Bras Basah Road), விக்டோரியா சாலை (Victoria Street),
பிரிஸ்சிப் சாலை(Prinsep Street), குவின் சாலை (Queen Street), வாட்டர்லோ (Waterloo Street).இச்சாலைகள் யாவும்
சிராங்கூன் சாலையை ஒட்டியே அமைந்திருந்தன.

இப்பகுதி சாலைகளில் வாழ்ந்த இந்தியர்கள் மாலையில்
ஒன்று கூடும் பொது இடமாக வாட்டர்லோ சாலை
அமைந்திருந்தது. கடல் கடந்து வந்த இவர்களுக்கு ஒரு
வழிபாட்டுத் தலமிருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற
எண்ணம் தோன்றியதுதிரு.அனுமான் பீம் சிங் (Mr. Hanuman
Beem Singh) என்பார்க்கு. தாய்நாட்டை விட்டு வந்திருந்த
போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி,
தங்களின் கலாச்சாரம், மதம்,மொழி ஆகிவற்றை மறவாது
ஒழுகி நிற்கத் துடித்த காலம்.தங்களின் சக்திக்கேற்ப
ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை
அமைத்துவழிபட்டார்கள்.

அந்த எண்ணத்தைச் செயலாக்க வாட்டர்லோ சாலையி
லிருந்த தென்னை,வாழைத்தோட்டங்களைச் சுத்தம் செய்து
ஒரு ஆலமரத்தின் கீழ் அனுமான், விநாயகர் தெய்வங்களை
வைத்து விளக்கேற்றித் தினந்தோறும் பூஜை செய்து
வழிபாட்டைத் தொடங்கினார்கள்.சில காலத்திற்குப் பின் கிருஷ்ணனையும் வைத்து வழிப்படத்தொடங்கியுள்ளார்கள்.

சிறிய குடிலாக இருந்தபோதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்கவே ,பக்தர்களின் எண்ணிக்கைக்குஏற்பக்
கோவில் பெரிதாக இருக்கவேண்டும் எண்ணினார்.
1880 - ஆம் ஆண்டில் திரு.அனுமான் பீம் சிங்
கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தினைத் தன் மகன்
திரு. உம்நா சோம்பா (Humna Somapah) - விடம்
ஒப்படைத்து, கோவிலின் தர்மகர்த்தாவகவும்நியமித்து
உள்ளார்.(1880 -1904)

திரு. உம்நா சோம்பா நிருவாகத்தில் கிருஷ்ணன் கோவிலை
கூரை குடியிலிருந்து செங்கல்,காரை கற்கட்டிடமாக மாற்றி, சுற்றுபுறங்களை செப்பனிட்டு வேலியிட்டு மேம்பாட்டு பணிகளைச்செய்துள்ளார்.1904- ல் திரு. உம்நா சோம்பா
(Humna Somapah) தன் உறவினரான ஜோக்னி அம்மாளிடம்
(Joognee Ammal) பொறுப்பை ஒப்படைத்தார். ஜோக்னி
அம்மாள் பொறுப்பேற்றவுடன் கோவிலை மேம்படுத்தி,
சீரமைத்துள்ளார். புதிய முறையான மூலஸ்தானமும்,
விமானம் அமைத்து 1933–ல் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.

1935-ல் ஜோக்னி அம்மாள் திரு. பக்கிரிசாமியிடம் கோவில் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.திரு. பக்கிரிசாமி பொறுப்
பேற்றவுடன் மேலும் சில கோயில் கட்டிட பணிகளை மேற்கொண்டுள்ளார்.மூலஸ்தானத்திற்கு முன் மேல்
தளத்துடன் கூடிய ஒரு மண்டபம் கட்டியுள்ளார். இதன் கும்பாபிஷேகம்21-ம் தேதி, சனவரி 1959- ஆண்டு
நடைபெற்றுள்ளது.

1984-ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தைத் தன் மகன்
ப.சிவராமனிடம் ஒப்படைத்தார். திரு. சிவராமன்பொறுப்
பேற்றவுடன் பெரிய மாற்றங்களைச் செய்தார். தற்போதைய தேவைக்கேற்ப கோவில் புதுப்பிப்பும்முன்னேற்றமும்,
பொலிவும் பெற்றன. கோயில் நுழைவாசல்,கோபுரம்
புதிப்பிக்கப்பட்டது.
புதிய சன்னதிகளில்ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை,
குருவாயூரப்பன், சுதர்சனா, மகாலெட்சுமி சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டன.புதிதாக வசந்த மண்டபமும் கட்டப்பட்டது.
இதன் கட்டிடப் பணி நிறைவு பணி பூஜைகள் 12-11-1989-ல்நடந்தேறியன.

சூரிய ஒளியால் உலகம் முழுவதும் தங்க முலாம்
பூசியது போல் கண் கொள்ளாக் காட்சி கிருஷ்ணனின்
அழகிய வடிவம். கருநீல ஒளியை வழங்கும் முகத்தின்
வடிவம், காண்போரின் கண்களையும், கருத்தினையும்
கவர்ந்திழுக்கும் அருள் வடிவம்.கிருஷ்ணன் கோவிலை
அடுத்து சீனக் கோயிலும் அமைந்துள்ளதால்சீனப் பக்தர்களும் கிருஷ்ணன் கோயில் வந்து கிருஷ்ணனின் தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள்.

137 ஆண்டு வரலாறு கொண்ட கிருஷ்ணன் கோயில் இன்று
கண்கவரும் வண்ணங்களுடன் சுற்றுப்பயணிகளையும் கவர்ந்து வருகிறது.

கோவிலில் யோகா, வேத வகுப்புகள், நாதஸ்வரம், தவில்,
நாட்டியம், தற்காப்புக்கலைகள், நுண்கலைசம்பந்தமான
வகுப்புகள் போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
பூஜைகள் தினம் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை 6-30 முதல் 12 மணி வரையும், மாலை 4-30முதல்
இரவு 9-30 வரை பூஜைகள் நடக்கின்றன.

விழாக்கள்....!

தமிழ் புத்தாண்டு விழா, வசந்த நவராத்திரி, வைகாசி வைசகம், ஆடி வெள்ளி, செவ்வாய், சங்கு அபிஷேகம்,வரலெட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனி வாரம்,திருக்கார்த்திகை, சர்வலாய விஷ்ணு தீபம்,ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.
கல்வி உதவி நிதி இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்தில் ஆலயங்களும் பங்கேற்க முடியும் என்பதில் கிருஷ்ண ஆலயம் கல்விக்குஉதவி நிதி அளிக்கிறது. தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கும், பலதுறை தொழிற் கல்லூரிமாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கல்வி நிதியாக வழங்குகிறது.


- கிருஷ்ணன்,
சிங்கப்பூர்.


ஆலய முகவரி:-


Sri Krishnan Temple,

152 Waterloo St.,

Singapore 187961

Tel 6337 7957 F, 6334 271267695784 F. 67699003

ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம்


Sir Manmatha Karuneshvarar Sivan Temple

ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர்
சிவன் ஆலயம்

காசிபமுனிவருக்கு மயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான்.கடுந்தவம் புரிந்து பரமேசுவனிடம்அளப்பரிய வரங்களை பெற்ற சூரன், முன்று லோங்களும் அவன் ஆளுகைள் வந்தன.வானவர்களை அடக்கிகடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவேந்திரன் மைந்தனாகிய ஜயந்தனும், தேவர்களும்,தேவமாதர்களும் சிறையில் அடைபபட்டு வேதனைப்பட்டார்கள்.
சூரபத்மனின் கொடுமை தாங்காமல், இந்திரன் மேருமலையில் பெருந்தவம் செய்தான்.ஈசன் தரிசனம் தந்து''தவத்தின் நோக்கமென்ன? என்று வினவினார். ''அசுரன் சூரபத்மனின் தொல்லைகள் எல்லை மீறிவிட்டன.எதிர்த்துப் போரிட களுக்குப் போ எங்திய வலுவில்லை. ஐயனே! இதற்கொரு முடிவைக் காணவேண்டும்''என வேண்டி நின்றான்.
'இந்திரா! கவலையை விடு. நம்மால் தோற்றுவிக்கப்படும் குமாரனால் சூராதி அவுணர்கள் வேரோடு சாய்வர்''எனப் பெருமான் அருள்பாலித்தார். இந்திரன் ஆறுதல் கொண்டாலும் பரமன் இந்த அற்புதத்தை எப்போதுநிகழ்த்துவார்?எப்போது நம்துயர் விலகும் என்ற நெருடலோடு, பிரமதேவரை அணுகினான். பிரமதேவர்திருமாலை நாடினார். 'சிவமூர்த்தியின் யோகநிலை கலைந்தால்தான் பார்வதி திருமணம் நடந்தேறும்;பின்னர் குமாரர் தோன்றுவர்; சூரசம்ஹாரம் நிகழும்' என்றார்
'' பிரபோ! ஈசனை நெருங்கி அவருடைய யோகநிலையைக் கலைப்பதென்பது நிகழக்கூடிய காரியமா?அது சாத்தியமாகுமா? எனக் கேட்டார். ''மன்மதன் ஒருவரால் மட்டுமே முடியும். எல்லா வில்லாளிகளும்அம்பு தொடுத்து ஒன்றை இரண்டாகுவார்கள். மன்மதன் மட்டுமே இரண்டை ஒன்றாக்கும் ஆற்றல் பெற்றவன்.எனவே அவனை ஐயனிடம் அனுப்பி வையுங்கள்'' என்றார்.
பிரமதேவரும் மன்மதனை அழைத்து, ''சூரனின் கொடுமைகள் பற்றியும், தேவலோகம் படும் அவதி பற்றிஎடுத்துரைத்து, இறைவன் அருள்பாலித்தபடி குமாரக் கடவுள் தோன்ற வேண்டுமாகின் சிவத்தின் தவத்தைக்கலைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.'' என அவனிடம் வேண்டினார். இதைக் கேள்விப்பட்ட மறுகணமே,மன்மதன் தீயை மிதத்தவன் போலாகி, 'ஈசனுடைய மகிமையை நன்கு உணர்ந்த தாங்களா இந்த விபரீதவிளையாட்டில் இறங்க என்னைத் தூண்டுகிறீர்கள்? நான் அற்புத விளையாட்டுகளைச் செய்தவன்தான்.என்னுடைய பாணங்களுக்குக்குத் தப்பியவர் யாருமில்லைதான். ஆனால், பரமனை என்னால் இவ்விஷயத்தில்நெருங்க முடியுமா? எனப் பலவாறு மறுத்துரைத்து மன்றாடினான். மறுப்புரை செய்த மன்மதனைக் கடைசிக்கட்டமாக, ''மீண்டும் மறுத்தால், எனது கொடிய சாபத்திற்கு ஆளாக நேரிடும்'' எனக் கோபத்தோடு சொன்னார்பிரமன்.எந்த வகையில் பார்த்தாலும் இருவரின் சாபங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதையுணர்ந்த மன்மதன்,பரமனிடம் சாபம் பெற்று மடிவதே மேல் என்ற முடிவோடு சம்மதித்தான். இதனை மனைவி இரதிதேவியிடம்,விவரித்தான். இரதியையும் அழைத்துக்கொண்டு கரும்பு, வில், கரும்பு நாண், அரும்பு பாணம் எனபஞ்சபாணங்களோடு, தென்றலாகிய தேரில் ஏறிக் கயிலாயம் நோக்கிப் பயணமானான்.
மன்மதன் தேரேறி மேலை வாயிலில் நுழைந்தான். கல்லால மரத்தினடியில் சனகாதியர் முன்பு எம்பெருமான்அமர்ந்திருந்த திருக்கோலத்தைக் கண்டான். ''சகல லோகங்கலையும் இமைப்பொழுதில் சாம்பலாக்கி,நீறு செய்யும் நிமலனைப் பூமலர்க்கணை கொண்டா போர் புரிவது'' என்று கலங்கி விதி வலியது என்றமுடிவோடு, கரும்புவில்லை வளைத்து நாணேற்றி, தண்மலர்க்கணைகளைப் பூட்டி, மதிசடை நாயகன் முன்சென்று தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு, மேனி நடுங்க பாணங்களைப் புட்டி வில்லை வைத்து இறைவன்திருமேனி நோக்கிப் பிரயோகம் செய்தான்.
விரைந்து சென்ற பாணங்கள் ஈசனின் மேனியைத் தாங்கிய மறுகணமே அவரது நிஷ்டை கலைந்தது.கோபத்தில் கண்கள் சிவக்க, எய்தவனை நோக்கினார். நெற்றிக்கண் திறந்ததும் அதிலிருந்து பாய்ந்ததீப்பொறிகள் இமைப்பொழுதில் மன்மதனைச் சாம்பலாக்கிவிட்டது. இதனைக் கண்ணுற்ற இரதிதேவிதலைவிரி கோலமாக இறைவனிடம் ஓடி வந்து புலம்பினாள்.
''தேவர்களின் துயரத்தைப் போக்கத்தான் என் மணாளன் இந்தப் பாதகச் செயலில் இறங்கினார்.காரணகர்த்தாவாகிய அவர்களை மன்னித்த பிரபு, என்னவருக்கு உயிர்ப்பிச்சை அளித்து எனக்குமீண்டும் வாழ்வளிக்க வேண்டும்'' என முறையிட்டாள். ஈசனும் ''பெண்ணே! கவலைப்படாதே!உன் கணவரை உயிர்ப்பித்துத் தருவேன். ஆனால், உன் கணவன் உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்''என உரைத்தார்.
மிகுந்த கருணைக் கொண்டு மன்மதனின் உயிரை உயிர்பித்து தந்தததால் ஈசனுக்கு காரூணீஸ்வரர்என்று பெயர் வந்தது. மன்மதனுக்கு கருணை புரிந்ததால் ''மன்மத காரூணீஸ்வரர்'' ஆனார்.

சிங்கப்பூரில் அமைந்திருக்கும் ஒரே ஒரு ஆலயம் '' ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் ''சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் தோற்றம் கண்டது.காலாங் காஸ்வேர்க்ஸ் (Kallang Gas Works) சிவன் கோயில் என பெரும்பாலான பக்தர்களால்அழைக்கப்பட்ட இவ்வாலயத்திற்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு.
போக்குவரத்து அதிகம் உள்ள காலாங் சாலையிலும்,சிங்கப்பூர் குடியேற்ற (இமிகிரேஷன்) கட்டடத்திலிருந்துசுமார் 300 மீட்டர் தொலைவிலும், அமைதியான, பசுமையான சுற்றுபுறம், ஆலயத்தின் பின்புறத்தில்நெளிந்தோடும் அழகான காலாங் நதி..., இந்த சுழ்நிலையில் அமைந்துள்ளது ஆலயம்.
தமிழ் மக்கள் வழிபாட்டுக்கு ஒரு தலம் அமைத்துக்கொள்ள ஸ்ட்ரேஸ் செட்டல்மெண்டு(Governor of Straits Settlement) கவர்னரால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் 1888 - ஆம் ஆண்டுசனவரி 1-ம் தேதி கோயில் ஸ்தாபிக்கப்பட்டது. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் 1909 –ஆம் ஆண்டு மார்ச் மாதம் பழைய பட்டாவுக்கு பதில் புதிய பட்டா 99 ஆண்டு குத்தகைக்குகொடுக்கப்பட்டது.
இடைப்பட்ட இருபத்திரண்டு ஆண்டு காலத்தில், 1909 –ல் பட்டாவில் கையெழுதிட்ட அனைவரும்இயற்கை எய்தி விட்டதால், 1931–ல் காஸ்வேர்க்கில் தலைமை போர்மேனாகப் பணியாற்றியதிரு.ஏ.வி.இருளப்ப பிள்ளை கோயிலின் விவகாரங்களை எடுத்து நடத்தினார். அவரும் அவர்களதுநண்பர்களும், சகாக்களும் ஆலயத்தை காரை, காங்கிரீட் கட்டிடமாக மாற்றினார்கள். ஆனாலும் அவர்கள்அவர்கள் நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கினார்கள்.
1934-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி திரு.ஏ.வி. இருளப்ப பிள்ளை கேட்டுக் கொண்டதற்கு இணங்கமறைந்த தங்களின் தந்தை கு.வேலுப்பிள்ளை நினைவாக கோயிலைக் கட்ட திரு.பக்கிரிசாமி பிள்ளையும்அவரின் சகோதரர் திரு.வி.நாராயணசாமி பிள்ளையும் ஒப்புக்கொண்டனர்.
சுவான் அண்ட் மெக்லரண்ட்(Swan & Mclaren) எனும் கட்டடக் கலை நிறுவனம் கோயில் வரைபடங்களைதயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 1934–ம் ஆண்டு டிசம்பர் 27–ம் தேதி புதிய வரைப்டம் தயாரானது.விமானம் மற்றும் அலங்கார வேலைகளை மேற்கொள்ள திரு.கந்தசாமி, திரு.எஸ்.ராஜாமணி ஆகிய ஸ்தபிதகள்1935-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டனர். 1937 ம் ஆண்டுகும்பாபிஷேகம் கண்டது.
இருளப்ப பிள்ளையும் அவரது குழுவினரும் தொடர்ந்து நிதிப்பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கியதால்1939–ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி திரு.வி.பக்கிரிசாமி பிள்ளை கோயில் தலைவராக நியமிக்கப்பட்டதுடன்ஆலய விவகாரங்களை கவனித்துக் கொள்ளவும், மிகுதியாக ஏற்படும் செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் 1951-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும்,1974 நவம்பர் 29-ம் தேதியும் ஆலயத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
1993-ம் ஆண்டிலிருந்து நிர்வாக அறங்காவலரான திரு.பி சிவராமனும்நிர்வாகக் குழுவினரும் சிறுசிறு புதுப்பிப்புபணிகளை மேற்கொண்டனர். கடைசி புதுப்பிப்பு பணி 1997-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அதாவது, 1937 –ம்ஆண்டில் வந்த ஈஸ்வர தமிழ் ஆண்டின் 60 கால சுழற்சிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம்நடத்தப்பட்டது.
ஆலய வலம்
மூலவர் மூர்த்திகள்
நந்திகேஸ்வரர்.
முதலில் நம்மை வரவேற்பவர் நந்திகேஸ்வரர். சிவபெருமானின் ரிஷப வாகனமாகும். ஈஸ்வரருக்கு மிகவும்அருகில் இருப்பவர். நந்தி பெருமான் எப்போதுமே சிவனை நோக்கி அமர்ந்திருப்பார்.பரமாத்மவுடன் ஆத்மாஇணைய வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நந்திகேஸ்வரர் சிவபெருமானை வணங்கும் நிலையில்இருக்கிறார்.
மன்மத காரூணீஸ்வரர்.
ஆலயத்தில் நுழைந்தவுடன் நமக்கு முதலில் காட்சியளிப்பர் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர். மூல மூர்த்தியாகஇவ்வாலயத்தில் அமைப்பட்டு அருவுரு சிவலிங்கம் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வர சிவன் என்று அழைப்படுகிறது.சிவலிங்கம் சிவரூபமாக அமைந்துள்ளது. நம் கண்ணுக்கு புலப்படும் சிவலிங்கத்தின் மூன்று பிரிவுகள்முத்தேவர்களையும் பிரதிபலிக்கின்றன்.
சதுர அடிப்பாகம் பிரம்மா, எண் கோண தூண்வடிவம் விஷ்ணு, வட்டமான மேற்பகுதி ருத்ரர்.சுத்த வித்யா தத்துவம் எனும் பிரிவில் ஒரு பெரும் பகுதியாக இந்த முத்தேவர்கள் அமைந்துள்ளனர்.வட்டமான மேற்பகுதியில் சிவதத்துவத்தின் ஐந்து கூறுகள் அமைந்துள்ளன. அதைப் போலவேவிஷ்ணுவிற்கு ஏழு வித தத்துவமும் பிரம்மாவிற்கு 24 ஆத்ம தத்துவமும் உள்ளன.
சிவலிங்க ரூபங்களை அதாவது உச்சிமுகம் ஈசானம், கிழக்கு முகம் தற்புருடம், தெற்கு முகம் அகோரம்,வடக்கு முகம் வாமதேவம், மேற்கு முகம் சத்தியோசாதம் ரூபங்களை சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல், அருளிச்செய்தல் ஆகிய ஐந்து செயல்களை சிவலிங்கம் பிரதிபலிப்பதாகக் கூறுவதுண்டு.
இதனை திருமூலர் திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார்.ஐந்து முகம்உள ஐம்மூன்றுஐந்தினோடைந்து கரதலம் தானுளஐந்துடன் ஐந்தாயுதமுள நம்பி என்நெஞ்சு புகுந்து நிறைந்தது நின்றானே.
விநாயகர்
அருவுரு சிவலிங்கத்தின் இடது புறம் வெற்றிகரமாக எல்லா காரியங்களும் நிறைவேறவும்,விக்கினங்கள் நீங்கவும் அருள்புரியும் விக்னேஷ்வரர் விநாயகர்.
தண்டாயுதபாணி
வலது புறம் எளிமையான வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கில் முருகன் தண்டாயுதபாணிஉருவத்தில் உள்ளார்.
பர்வதவர்த்தினியம்பாள்(பார்வதி)எல்லா உயிரினங்களுக்கும் கருணை கொண்டு காக்கும் அன்னையாக பர்வதவர்த்தினியம்பாள்(பார்வதி) அருள்பாலிக்கிறாள்.
தட்சிணாமூர்த்தி.சிவனின் மறு உருவமே தட்சிணாமூர்த்தி. பேருண்மையை போதிக்கும் குருவாக இங்கும் அருள்புரிகிறார்.
சண்டீஸ்கேஸ்வர்.சிவபெருமானையே சதாகாலமும் தியானித்துக்கொண்டு இருக்கும் சண்டீஸ்கேஸ்வர்.
நவகிரங்கள்
சிவ தரிசனத்தின் முழுப்பயனை இவரின் அருளாலேயே கிடைக்கப்படுகிறது.கோளங்களின் தாக்கத்தால்ஏற்படும் தீங்குகள் குறைய நவகிரங்கள் தனி மண்டபத்தில் ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
பைரவர்.ஆலயத்தின் காவல் தெய்வாமாக இருப்பவர் பைரவர்.ஆலய நிறைவு பூஜையான அர்த்தஜாம புஜையைஇவர் சன்னதியில் பூர்த்தி செய்து விடைபெறுவது சிவாகம மரபில் இருந்து வருகிறது.இங்கும்ஆலயத்தையும் நகரத்தையும் காவல் தெய்வமாக இருந்து காத்து அருள் புரிகிறார்.
- கிருஷ்ணன்,
சிங்கப்பூர்.

முனீஸ்வரன் ஆலயம்


Sri Muneeswaran Temple (Queens Town)
முனீஸ்வரன் ஆலயம்

வேதக்காலங்களில் மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருந்தனர். கல்வியின் சிறப்பைஅவர்கள் உணராமல் வாழ்ந்தனர். ஞானிகளும் அறிவையும் ஞானத்தையும் தேடாமல் சுகபோகவாழ்வைத் தேடிச் செல்லலாயினர். அறியாமை எங்கும் சூழ்ந்தது. சனகன், சந்தனன், சனத்னன்,சந்தனகுமாரன் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்ட அவர் தென்திசை நோக்கிக்குருவாக அமர்ந்து ஞானத்தைப் போதித்தார். அதன் பின்னரே வேதங்களும் இதிகாசங்களும்தோன்றின.தட்சிணாமூர்த்தியாக சிவபெருமானாகக் காட்சி அளித்தார்.
முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைத் போதித்ததால் அவர் முனீஸ்வரர் என்றுஅழைக்கப்பட்டார். ஆனால் மக்கள் ஏனோ முனீஸ்வரரைக் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள்.
சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாகவும், முனீஸ்வரராகவும் இருந்து நம்முள் இருக்கும்அறியாமையை அகற்றுகிறார்

ஸ்ட்ரேயிட்ஸ் செட்டல்மெண்டின் (Straits Settlement)ஒரு பகுதியான சிங்கப்பூரில் 1928 – ல்தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.முதல் இரயில்1932-ல் ஓடத் தொடங்கியது. தண்டவாளங்கள்,இரயில் பெட்டிகள், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு மலேசிய இரயில்வே ஊழியருடையதாகும். இவர்களில்பெரும்பாலோர் இந்தியர்கள். இவர்கள் யாவரும் குவீன்ஸ் டவுனில் (Queens Town) வசித்து வந்தார்கள்.
பண்டைக்காலத்தில் இருந்து தமிழர்கள் எங்கு குடியேறினாலும் ஆன்மீக தேவைகளைப் பூர்த்திசெய்யஏதேனும் ஒரு வடிவத்திலோ உருவத்திலோ கோயில் ஒன்றை நிறுவி வழிபடுவது வழக்கம். அதற்குஇங்கு வசித்த தமிழர்களும் விதிவிக்கல்ல.சூலம் ஒன்றையும், கல் ஒன்றையும் நிறுவி சிறு கூரையுடன்கூடிய குடில் ஒன்றினை அமைப்பார்கள். இந்த கூரை குடிலையே கோயிலாக எண்ணிவழிபடுவார்கள்.
ஆலய வரலாறு
ஆரம்ப காலங்களில் குவின்ஸ்வே(Queens Way) செல்ல ஒரு சிறிய சாலை மட்டுமேஇருந்தது. இரயில் தவிர வேறு வகையான போக்குவரவு மிகக் குறைவு. சிங்கப்பூர் அரசாங்கம்குவின்ஸ்வே (Queens Way) பகுதியை மேம்படுத்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மூலம்தொடங்கியது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குவீன்ஸ் கிரசண்டில் ஏழு ஓரறை வீடு கொண்ட அடுக்கு மாடிக்கட்டடங்களைக் கட்டி வந்தது. பின்னர் கடைகளும் அங்காடி நிலையம் ஒன்றும் சேர்ந்துஅப்பகுதியை மேலும் மக்கள் நடமாட்டமும் உயிரோட்டமுள்ள இடமாக செய்தது. அங்கேவசித்து வந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், அதுவும் இந்துக்கள் என்பதால் ஒருகோயிலின் அருகில் வாழ விரும்பினர். ஆகவே, அவர்கள் ஒரு சூலத்தையும், கல்லையும்வைத்து முனீஸ்வரனாக வழிபட ஆரம்பித்தனர்.
தினமும் வேலைக்கு செல்லும் முன் அவர்கள் குடிசையான கோயிலில் பிரார்த்தனைசெய்து விட்டு புறப்பட்டனர். அவர்கள் சூலத்தையும் கல்லையும் முனியாண்டி என்றுஅழைத்துடன் முனியாண்டி அல்லது முனீஸ்வரன் தேவகனம் எனும் சிவபெருமானின்உடலில் இருந்து மாற்றப்பட்டதாக நம்பினர்.’’
1961 –ம் ஆண்டில் குவீ ன்ஸ்வே டவுனில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின்தொடக்கக் குடியேறிகளில் ஒருவரான திரு.எ ன்.வீ. மேனன் இந்த குடிலைமுறையான கோயிலாக எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படமுனைந்தார்.
முதலில் குடிலுக்கும் குவீன்ஸ்வே சாலைக்கும் இடையே இருந்த செடி,கொடிகளையும், ஐந்து அடி உயரம் வளர்ந்திருந்த கோரைப் புற்களைஅழித்து சுத்தம் செய்து ஒரு ஒற்றையடி பாதை அமைத்தனர்.1962-ல்குவீன்ஸ் டவுனில் வசித்த அன்பர்கள், பக்தர்களைக் கொண்டு ஒருஇடைக்கால நிர்வாகம் அமைத்து அரசாங்கத்தில் பதிவு செய்யமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. முனீஸ்வரன் கோயில் அதிகாரப்பூர்வமாக1967-ல் மார்ச் முதல் தேதி பதிவு செய்யப்பட்டது.
ஆலய கட்டுமானப் பணி.
கோவில் அமையவிருந்த நிலம் மலேயன் ரயில்வே நிறுவனத்திற்குத் சொந்தமானதாகஇருந்ததால் அவர்களின் அனுமதி கோரினர். கோயிலை எழுப்ப மலேய ன் ரயில்வேஅதிகாரிகளிடம் பிரதிநிதித்துவம்செய்யப்பட்டபின் கோயிலைக் கட்டிக்கொள்ளதற்கால உரிமம் வழங்கப்பட்டது. விரைவாகக் கட்டுமானப்பணியும் தொடங்கியது.டிசம்பர் 1969- க்குள் எளிய முறையில் கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டு முனீஸ்வரர்,விநாயகர், மாரியம்மன், முருகன் ஆகிய சிலைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டன.இடைக்காலத்தில் தற்காலிய பிரச்சனைகள் தோ ன்றினாலும் நிர்வாகக் குழுவினரும்தொண்டூழியர்களும் விரைவாக தீர்வுக் கண்டனர்.
முனீஸ்வரன் கோயில் முதல் கும்பாபிஷேகம் 18 தேதி, ஜனவரி, 1970– ல் நடந்தேறியது.புதிய ஆலய பூஜைகளை நடத்தும் பொறுப்பினை கதிகாய பண்டாரம் ஏற்றார்.
மீண்டும் ஒரு புதிய அத்தியாயம்
இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.குவி ன்ஸ்வேயில் இருந்த பழைய இடம் இரயில்வே காரியங்களுக்கு மட்டுமேஒதுக்கப்பட்டிருந்தது. அதனால்,அன்றைய மேலாண்மைக் குழு கட்டட சீரமைப்புபணிகளை மேற்கொள்ள இயலவில்லை. வேறொரு இடத்தில் புதிய கோயிலைக்கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என குழு தீர்மானித்தது. அந்த தீர்மானத்தின்காரணமாக, புதிய இடம் கோரி பல முறையீடுகள் செய்யப்பட்டன.
புரிந்துணர்வு மிக்க பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்து அறக்கட்டளைவாரியமும் தகுந்த ஓர் இடத்தைப் பெற்று தந்தனர். ஆனால் அவ்விடம் 1993வரை அமைந்திடவில்லை.
மலேயன் இரயில்வே அதிகாரத்தின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்திருந்த எல்லாகுடிசைகளையும் அப்புறப்படுத்துவது, மறுசீரமைப்பு கொள்கை என வீடமைப்பு வளர்ச்சிகழகம் தெரிவித்தது. முனீஸ்வரர் கோயிலும் மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்தகாரணத்தால், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முனீஸ்வரர் கோயில், மற்ற கோயிலுடன்இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
மலேயன் இரயில்வே அதிகாரத்தின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்திருந்த எல்லா குடிசைகளையும் அப்புறப்-படுத்துவது, மறுசீரமைப்பு கொள்கை என வீடமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்தது. முனீஸ்வரர் கோயிலும்மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்த காரணத்தால், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முனீஸ்வரர்கோயில், மற்ற கோயிலுடன் இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
நான்கு கோயில்களுடன் சேர்ந்து அமைப்பதற்கு வீடமைப்பு வளர்ச்சி கழகம் மாற்று இடம் வழங்கியது.இணைய பரிந்துரைக்கப்பட்ட கோயில்:-1. சிலாட் சாலையிலுள்ள வேல் முருகன் கோயில்.2. ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்மன் கோயில்.3. கான்பரா சாலையிலுள்ள புனித மரம் பாலசுப்பிரமணியர் கோயில்.4. புக்கிட் தீமா அவென்யூவிலுள்ள இராம பக்த அனுமான் கோயில்
ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்ம ன் கோயிலைத் தவிர ஏனையகோயில்கள் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை.
புலோ புக்கம் தீவிலிருந்த விநாயகர் கோவில்,எண்டர்சன் சாலையிலிருந்த சித்தி விநாயகர் கோவில்,முனீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் ’’முனீஸ்வரன் கோயில்’’என்ற பெயரில் ஒரு குடை கீழ் இணைந்தன.
இறுதியில் 3, காமன்வெல்த் டிரைவில்(Commonwealth drive) 2500 சதுர மீட்டர்நிலத்தில் முனீஸ்வரன் கோயில் இயங்க வீடமைப்பு கழகம் அனுமதி அளித்தது.இந்நிலத்திற்காகக் கோயில் நிர்வாகம் வீடமைப்பு கழகத்திற்கு 550,000 வெள்ளிவழங்கியது. 20-ம் தேதி, நவம்பர், 1994 ஆண்டு அடிக்கல் நாட்டு விழா முனீஸ்வரர்ஆலய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
இந்து சமூகத்தினரின் சமய தேவைகளை மேம்படுத்திப் பூர்த்தி செய்யவும், இந்துசமூகத்தினர் சமூக, கலாச்சார, கல்வி, பொழுதுபோக்கு, சமூக சேவை தேவைகளைஉணர்ந்து அவற்றை மேம்படுத்த, ஐந்து அடுக்கு கொண்ட இராஜகோபுரத்துடன்,பிரதான கோயில் வழிபாட்டு சன்னிதிகளுடன் பன்னோக்கு திருமண மண்டபம்,விசேஷ நடவடிக்கைகளுக்குத் தனி அறை எனச் சிறப்பான முறையில் ஆலயம்அமைந்துள்ளது.
முனீஸ்வரர் சன்னிதி தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் சிறப்பானது.மிக பெரியது என நம்பப்படுகிறது. அது இந்தியாவின் தலை சிறந்த கட்டடகலைஞர்கள், சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டது. இந்து சமயத்தின்நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளைப் பிரதிபலிக்கிறது இச்சன்னிதி.முனீஸ்வர பெருமானை வழிபடும் போது பக்தர்களின் பார்வையை தூண்கள்மறைக்காதிருப்பது தனிச்சிறப்பு. வேறெங்கிலும் உள்ள சன்னிதிகளில்அரிதாகக் காணக்கூடிய கட்டட அமைப்பின் சிறப்பை முனீஸ்வரர் சன்னதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்து சமயத்தின் கீழ் சைவ, வேதாந்த தந்தர கோட்பாடுகள்ஒன்றிணைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பாகும். அருள்மிகு முனீஸ்வரரின்அளவற்ற சக்தி, பரிவு, எழில், சாந்தம், உண்மை ஆகிய தன்மைகளைக்கொண்ட தெய்வங்களை ஒன்றிணைந்து அமையப்பெற்றிருக்கிறது.சிற்பமும் கைவண்ணமும் இணைந்து பக்தியுடனும் பெருமையுடன் வணங்கிநிற்கும் பக்தர்களுக்கு அமைதியையும் நளினத்தையும் பறைசாற்றுகின்றன.
சன்னிதிகள்மூலவராக முனீஸ்வரர், கர்ப்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன்,மாரியம்மன், கிருஷ்ண ர், ஐயப்பன் சுவாமி, காசி விசாலாட்சி, நவகிரகங்கள்என அருள் பாலிக்கிறார்கள்.
சமய விழாக்கள்.ஆண்டுதோறும் விசாக தினத்தில் கூட்டு பிராத்தினை,பஜனையும், முருகப்பெருமானுக்கும், தெய்வானை,வள்ளி ஆகியோருக்கும் நிகழ்ந்த தெய்வீகதிருமண விழா, சித்திரா பெளர்ணமி,கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர்சதுர்த்தி, கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி,மாசி மகத்தி ன் முதல் நாள் சங்கு 108 பூஜை, நவராத்திரி விழாக்களுடன்முக்கிய பண்டிகை நாட்களில் பூஜைகள், சமய விழாக்கள் நடத்தப்படுகின்றன.
சமூக சேவை திட்டங்கள்ஆலயம் என்பது வழிபாட்டுக்கு உகந்த இடமாக மட்டும் இருந்தால் போதாது.அது இந்து சமூகத்தினரின் சமூக, கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க இடமாகவும் விளங்கிட வேண்டும்.முனீஸ்வரர் ஆலயத்தில் பலதரப்பட்டசமூக சேவை திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது.இலவச சட்ட ஆலோசனைசேவை, எழுவர் கொண்ட காற்பந்தாட்டம், மெதுவோட்டம், இந்து சமயப் பாடதுணை வகுப்பு, சத்திய சாயிபாபா பஜனை ம ன்றம், தேவார வகுப்புகள் தமிழ்பாலர்பள்ளி, இயற்கை சிகிச்சை முறை, பரத நாட்டியம் வகுப்பு, யோகப் பயிற்சி,சிறையில் இருக்கும் கைதிகளுக்குச் சமய வழிப்பாட்டைக் கடைப்பிடிக்கவும்,பின்பற்றவும் பயிற்சியும், ஆலோசனை வழங்குதல் என பல் வேறு சமூக நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளது.
தினம் வேலைக்குச் செல்லுமுன் இங்கு வந்து வணங்கி செல்வார்கள்.இந்த கல்லும், சூலமும் பிற்காலத்தில் முனீஸ்வரருக்கு அழகிய கோயில்அமைந்திட வழி வகுக்கும் என்று அன்று யாரும் சிந்திக்கவோ, எதிர்பார்க்கவோஎண்ணியோ இருக்க மாட்டார்கள்.
நல்ல செயல்கள், சிந்தனைகள் என்றும் கனவாகி போனதில்லை.
நன்றி, வணக்கம்.
ஆலய முகவரி:-
Sri Muneeswaran Temple (Queens Town)
3, Commonweath DriveSingapore. 109670
Tel 64735037/ Fax. 64757967

- கிருஷ்ணன்,
சிங்கப்பூர்.

புனித மர ‘பாலசுப்ரமணியர் கோயில்



Yishun Bala Subramaniyar kovil


புனித மர ‘பாலசுப்ரமணியர் கோயில் [ஈ சூன்]


ஒவ்வொரு கோயிலிலும் தலமரம் எனப்படும்

‘தலவிருட்சம்’ இருப்பது நாம் அறிந்ததே.சிங்கப்பூர் போன்ற

நாடுகளில் அப்படி ஒரு தலவிருட்சம் அமையாதிருப்பதற்கு நகர அமைப்பும்ஒரு காரணமாகும்.


பண்டைய காலத்தில் ஆகம சாஸ்திர முறையில் கட்டப்பட்ட கோயில்கள் எல்லாம், இடத்தின் விசேஷம்,தீர்த்தத்தின் விசேஷம், ஏதேனும் ஓர் அற்புதம் நிகழ்ந்த இடம், எவரேனும் சித்தி பெற்ற - இறையருள்பெற்ற இடம்; எவருக்கேனும் இறைவன் காட்சி தந்த

இடம்; முனிவர், சித்தர், மகரிஷி, ஞானியர்போன்றவர்கள் தவம்

செய்த இடம் என சிறப்பு வாய்ந்த இடங்களில்தான் கட்டப்பட்டன.
முனிவர், சித்தர், மகரிஷி, ஞானியர் போன்றோர்கள், பெரிய பெரிய மரங்களின் அடியில்அமர்ந்துதான் தவம் செய்தனர்.

தியானம் செய்தனர், சித்தி பெற்றனர்.


எந்தெந்த மரங்களின் அடியில் அமர்ந்து தவம் செய்தால் எந்தெந்த அளவுக்குப் பலன்சித்திக்கும் என்பதையும்; எந்தெந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்; அங்கே எந்தெந்ததேவதைகளைத் தியானிக்க வேண்டும் என்பதையும் அறிந்து அதன்படி செய்தனர். மேற்குறித்த மிக நுட்பமான விஷயங்களை எல்லாம் நூல்களில் எழுதி வைத்தனர்.எந்தெந்தத் தலத்தில் யார் யார் எந்தெந்த மரங்களின் கீழிருந்து நீண்ட காலம் தவம்அல்லது தியானம் செய்து சித்தி பெற்றார்களோ, அத்தலங்களில் உள்ள மரங்கள்எல்லாம் தல மரங்களாகப் போற்றப்பட்டன, வழிபாட்டுக்கு உரியதாயின. இப்படித்தான்ஒவ்வொரு தலத்துக்கு உரிய மரம் தலமரம்

அல்லது ‘தலவிருட்சம்’ என்ற பெயர் பெற்றது.


புத்தர் பிரான் ஞானம் பெற்ற இடம் போதி மரம். எனவே அரச மரம் ஞானத்தின் சொரூபம்.மரம் மனித குலத்துக்கு ஒரு வரம் என்பது மிகையானதல்ல. மனிதன் தோன்றிய காலம்தொட்டு இன்றுவரை மரம் என்பது வாழ்வின் சகல பரிமாணங்களில் ஒன்றி நின்று பிரிக்கமுடியாததாக இருக்கிறது.


வேத காலத்திலிருந்து தற்காலம் வரை தெய்வ வழிபாடு, மதம் தொடர்பான சடங்குகள்எல்லாமே மரத்தால் ஆக்கப்படுவதே. மரங்கள் மருத்துவ குணம் உள்ளவை. அம்மன்என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வேப்பமரம். தமிழ் நாட்டு கோவில்களில்பெரும்பாலும் ஸ்தல விருட்சமாக வழிபாட்டுக்குரியதாக இருப்பது மரம்.


"மரங்களில் நான் அசுவத்தமாக (அரச) இருக்கிறேன்" என்கிறான் கிருஷ்ணன் கீதையில்.காலத்தால் முந்திய நூல் தொல்காப்பியம்

என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம்இலக்கணத்தை மட்டும் கூறாமல் தமிழர்களின் வாழ்வியலையும்கூறுகிறது.


தொல்காப்பியக்காலத்தில் மக்கள் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்குவகையாகப் பிரித்து நான்கு நிலங்களுக்கும் தனித்தனி இறைவனையும்படைத்து வழிபட்டு வந்த னர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.


மாயோ மேய காடுறை உலகமும்சேயோன் மேய மைவரை உலகமும்வேந்தன் தீம்புனல் உலகமும்வருண ன் மேய பெருமணல் உலகமும்முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்சொல்லிய முறையால் சொல்லவும் படுமேஎனத் தொல்காப்பியத்தில் இடம்பெறும் செய்தி மூலம் குறிஞ்சி நிலத்திற்குரியகடவுள் முருகன் என்பது புலனாகிறது.


சிங்கப்பூர் தீவின் வடப் பகுதி வட்டாரமாக அமைந்திருக்கும் இடம் செம்பவாங். சிங்கப்பூர் ஒரு கேந்திர முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதால்,பிரிட்டீஸார் தங்கள்இராணுவப் பலத்தைத் தூரக்கிழக்கில் நிலைப்படுத்தச் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தார்கள்.ஆகையால் தங்களின் பெரும் பகுதி கப்பல் படையை இங்கு நிறுத்தி வைத்திருந்தார்கள்.இவ்வட்டாரத்தின் தலைமை இடமாகச் சிங்கப்பூர் அமைந்திருந்தது.


சிங்கப்பூரின் பாதுகாப்புக்குவிமானப்படையும் கப்பற்படையும் தேவைப்பட்டது. சாங்கி வட்டாரத்தில் விமானப்படையும்செம்பவாங்கில் கப்பற்படையும் அமைக்கப்பட்டது. அத்துடன் போர் கப்பலைப் பழுதுபார்க்கும் மிகப் பெரிய பட்டறையும் இங்கு அமைந்திருந்தது. நூற்றுக்கணக்கானஇந்தியர்களுடன் உள்ளூர் மக்கள் என சுமார் பத்தாயிரத்திற்கு மேல் பல்வேறு துறையில்பணி புரிந்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் இந்தியர்கள். அவர்களின் குடியிருப்புக்காகக்சுமார் நூறு மனைகள் [புளோக்] நேவல் பேஸ் எனப்படும் இவ்விடத்தில் அமைந்திருந்தது.


கனவில் தோன்றிய பாலசுப்ரமணியர்...!


இந்த பட்டறையில் பணிபுரிந்தவர்களில் திரு.பி.கருப்பையாவும் ஒருவர். 1962-ஆம் ஆண்டுபொங்கலுக்கு முதல் நாள் திரு.பி.கருப்பையா ஒரு கனவு கண்டார். கனவில் முருகன் ஒரு தங்கநிற இராஜநாகத்துடன் இலந்தை மரத்தடியின் கீழ் காட்சி அளித்துள்ளார்.அவ்விடம் நேவல் பேஸ்குடியிருப்பு பகுதியின் அருகாமையில் அமைந்திருந்த புற்களூம், புதர்களும் நிறைந்த இருந்த இடமாகும்.


1962-ஆம் ஆண்டு பொங்கல் அன்று அவர் கனவில் கண்ட இடத்தினைச் சென்று பார்த்திருக்கிறார்.அங்கு அவர் கனவில் கண்ட இலந்தை மரத்தினைக் கண்டுள்ளார். அந்த இலந்தை மரம் ஆறுகிளைகொண்டு இருப்பதைக் கண்ட திரு,கருப்பையாவுக்கு ஆறு கரம் கொண்ட முருகனாகத்தோற்றமளித்து இருக்கிறது.ஒரு பாம்பு புற்றும், அருகில் அரச மரத்துடன், வேப்பமரம் ஒன்றும் இருக்கக் கண்டுள்ளார்.
இது குறித்து அக்கம் பக்கமிருந்த நண்பர்கள், தெரிந்தவர்களிடம் தான் கண்ட கனவைப் பற்றியவிபரம் கூறியுள்ளார். உடன் சில இளையர்களுடன் சென்று செடிகொடிகளுடன், புற்களும்,புதர்களும் நிறைந்த இடத்தைச் சுத்தம் செய்து மண் தரைகளைச் சமன் செய்து விநாயகர்,முருகன்,சிவன்,அம்பாள் படங்களை வைத்தும்/ முருகனுக்குரிய ஒரு பெரிய வேல் ஒன்றையும்வைத்து பூஜை செய்துள்ளார்.

தொடர்ந்து இலந்தை மரத்தைச் சுற்றி சிறு குடில் அமைத்து

விரிவாக்கப் பணியும் தொடர்ந்துள்ளது.
திரு.கருப்பையா வேலை முடிந்து மாலையில் விளக்கேற்றி பூஜைகள் செய்து வந்துள்ளார். இச்செய்தி அக்கம் பக்கம் உள்ள தமிழ் மக்களுக்குத் தெரிய வரவே அவர்களும் வந்துவழிபாடு செய்துள்ளார்கள்.


செம்பவாங் பகுதியில், (நேவல் பேஸ் உட்பட) சுற்றியுள்ள வட்டாரங்களில் நிறைய இந்தியர்கள்குறிப்பாகத் தமிழ் பேசும் தமிழர்கள் அதிகமிருந்த காரணத்தாலும், சுற்று வட்டராத்தில் கோயில்இல்லாத காரணத்தால் அங்கு ஒரு கோயிலை அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கவேஒரு சிறு குழு அமைத்தார்கள்.


இலந்தை மரமிருந்த இடம் பிரிட்டீஸ் கப்பற்படைக்குச் சொந்தமான இடமானதால், முறைப்படிஅத்தளத்தின் அதிகாரி கமெண்டரிடம் அனுமதி வேண்டினர். கமெண்டர் மறுப்பு எதுவும் கூறாதுசுமார் இரண்டு ஏக்கர் நிலத்திற்கு உத்தரவாதம் தந்தனர். இலந்தை மரம் இருந்த இடத்தையும்,அதனை ஒட்டிய நிலப் பகுதியில் வழிபாடு செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.


கோவில் தோற்றம்/ பதிவு....!


1964-ல் சிங்கப்பூர் சட்டப்படி இக்கோயில் பதிவு செய்யப்பட்டது.திரு,சரவணன் தலைமையில் ஒரு குழு அமைந்து, முருகனுக்கு ஒரு நிலையான கோயில் அமைக்கத்தொடக்க வேலையைத் தொடங்கியது. கப்பற்படை கமெண்டரும், சூப்பிரண்டும் கோவிலுக்குவேண்டிய தளவாடப்பொருட்களைக் கொடுத்து உதவினர்.
ஆங்கிலேயரானாலும் இந்து சமய கோவில் அமையப் பெரிதும் உதவினர்.புனித மரம் பாலசுப்ரமணியம்ஆலயம் உருவாக அவர்களின் உதவி பெரும் பங்காக அமைந்தது.


1964 முதல் இக்கோயில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களின் வரவும், அவர்களின்வேண்டுதல்கள் பலவும் நிறைவேறியதும், அதற்கான காணிக்கையும் பெருகவே மரப்பலகைகூரையுடன் இருந்த கோயில் சிமெண்ட,செங்கல் கொண்டு நிலையான கோயிலாகமாறியது.கோயில் திருப்பணிக்கு தமிழ்நாட்டிலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டார்.கால்கோள் விழா திரு.P. கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் நடத்தப்பட்டது.


விநாயகர், முருகன், அம்மன் விக்கிரங்கள் திரு.S.L. பெருமாள் அவர்களால் 1969- ஆம் ஆண்டுதமிழ்நாட்டிலிருந்து வரழைத்துத் தந்தார்.
1971 -ஆம் ஆண்டு சனவரி 31- ஆம் தேதி புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயில்கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 20,000 பக்தர்கள் சிங்கப்பூரின் பல பகுதியிலிருந்தும்,மலேசியாவிலிருந்தும் வந்து கண்டு களித்தனர்.


சிவபெருமான் அருவுருவில்லிங்கமாகவும்,காசி விசாலாட்சி, துர்க்கை, மாரியம்மன்,தேவி கருமாரி அம்மை,பெரியாச்சி, பைரவர், முனீஸ்வரர், இடும்பன், நவக்கிரகங்கள்போன்ற விக்கிரங்களும் இடம் பெற்றன. தனி

சன்னிதியாக சுவாமி ஐயப்பனும்இருக்கிறார்.திரு. P.A. தாசா என்பரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தர் சிலையும்நிறுவப்பட்டன.


புதிய நிர்வாகம்....!


1976 - ஆம் ஆண்டு திரு.E. நாராயணசாமி தலைமையில், ஆர்வமும், துடிப்பும் கொண்டஇளையர்கள்புதிய நிர்வாகத்தில் இணைந்தனர். கோயில் கட்டிடத்தில் மாற்றங்கள்செய்ததோடு புதிய சிற்பங்கள் உருவாகியதோடு பழைய சிற்பங்களைச் செம்மைப்படுத்தினர்கோயில் புதிய தோற்றத்தையும், புதிய பொலிவினைப் பெற்றது.இரண்டாவது கும்பாலிஷேகம் 1977- ஆம் நவம்பர் மாதம் நடைபெற்றது.
கோயில் இடமாற்றம்.


பிரிட்ட னின் பொருளாதார நெருக்கடியால் துரக்கிழக்கில் தனது இராணுவப் படையைக்குறைக்க எண்ணியது. 1971 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31- நாள் தொடக்கம் கட்டம்கட்டமாக படை மீட்பைத் தொடங்கியது. இதன் காரணமாக கோயில் நிலம் உட்படகப்பற்படைத்தளம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் அரசாங்கவரியாகக் கோவிலுக்கு சிங்கப்பூர் வெள்ளி ஒ ன்று வசூலிக்கப்பட்டது.


இதற்கிடையில் எம்.ஆர்.டி எனும் விரைவு இரயில் மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டங்களுக்காவும்கோவில் வேறு இடம் மாற வேண்டிய நிலை உருவாகியது. நிலத்திற்கு நஷ்ட ஈடாக வீடமைப்புவளர்ச்சிக் கழகம் ஒரு லட்சத்து எட்டாயிரம் வெள்ளியைக் கொடுத்தது.
நிர்வாக குழுவினர் மாற்று இடத்தைத் தேடி தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தைத்தேர்ந்தெடுத்தனர். நான்கு லட்சத்து எட்டாயிரம் வெள்ளிக்கு நிலம் வாங்கப்பட்டது.நிதி திரட்டபல்வேறு நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் ஈடுப்பட்டது.


1996-ஆம் ஆண்டு சனவரி 26- ஆம் நாள் பாலஸ்தானம் செய்யப்பட்டு, 1997 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் புதிய ஆலய கட்டுமானப் பணி தொடங்கியது. பாலசுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், இராஜ கோபுரம் என முழுக்கோவிலாக அமைந்தது. இவ்வமைப்புகள் யாவும் பாண்டியன் கட்டிட கலை முறைப்படி16 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16 பேறுகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது.இந்தத் தூண்களுக்கு ‘’சித்திரங்கண்ட ஸ்தம்பம்’’ எனப்பெயர். அதாவது சித்திரங்களால்அலங்கரிக்கப்பட்ட தூண்கள் என்பது பொருளாகும். மேலும் இக்கோவிலுக்குப் பதினாறுஅடி உயரம் கருங்-கல்லில் அஞ்சனேயர் விக்கரம் சண்முகம் ஸ்தபதியாரின் ஊரானதேவகோட்டைலிருந்து உருவாக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து ஸ்தாபிக்கப்பட்டதுகோவில் வளாகத்திலேயே திருமண மண்டபம் கட்டப்பட்டது.


1999 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 –ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாக்களில் முக்கியமாக, விஷேசமாக பங்குனி உத்திரம் இங்குக் கொண்டாடப்படுகிறது.


பங்குனி உத்திர விழா....!


பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கிய நாள் பங்குனி உத்திர திருநாள். உத்திர நாளோடுபெளர்ணமியும் சேர்ந்து வரும் ந ன்னாள். பங்குனி உத்திர திருநாளைச் சைவர்களும்,வைணவர்களும் தொன்று தொட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடி வந்துள்ளனர்என்பதற்கு இலக்கியச் சா ன்றுகள் உண்டு.முருக கோவில்களில் பால் காவடி எடுத்தல், படியேற்றுவிழா போ ன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.


முதன் முதலாக 1965-ல் பங்குனி விழா ஆரம்பிக்கப்பட்டது. சிவசாமி பண்டாரம் 6 இளையர்களுடன்காவடிதூக்கி பங்குனி உத்திர விழாவைத் துவக்கி வைத்தார். இன்று பல நூறு காவடிகளும்,பால்குடங்களும் முருகனின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.பங்குனி உத்திரத் திருவிழாதொடர்புடன் இரத ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டது. 1966- ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள்கொடுத்த சிறு வாகன வண்டியை 14 அடி இரதமாக மாற்றி அமைத்து முருகப் பெருமானின்படத்தை வைத்து கயிற்றால் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். அப்போது நேவல் பேஸ்குடியிருப்பு புளோக் வட்டாரத்தில் மட்டுமே இரத ஊர்வலம் நடைபெற்றது.


இன்று காலமாற்றத்திற்கு ஏற்ப ஈ சூன் குடியிருப்பு வீடமைப்பு வட்டாரப்பகுதியில் இரத ஊர்வலம் நடக்கிறது.

ஆலய முகவரி:-

HOLY TREE SRI BALASUBRAMANIAR TEMPLE,
10, Yishun Industrial Park A.Singapore 786772.

Tel : 67561912 / 67585528

- கிருஷ்ணன்,

சிங்கை.

வைராவிமட காளியம்மன் கோயில்



"வைராவிமட காளியம்மன் கோயில்"


காளி எனும் சொல்லுக்குக் கருமை நிறம் பொருந்தியவள்,

பால ரூபிணி என்றும் பொருள்.கருமையான நிறத்துடன்

மிகுந்த கோர வடிவுடையவள் காளி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆனாலும் அவள் கருணையே வடிவானவள்

என்றும் கூறுகின்றன.


எங்கும் வியாபித்து இருப்பவள்காளி. அவள் கருமை நீலம்

கொண்டவள். கடலைப் பார்க்கும்போது அது நீல நிறமாய்காட்சியளிக்கும்.கடல் நீரைக் கையிலேந்தி

பார்க்கும் போது நீல நிறம் மாறியிருக்கும்.இதன்

பொருள் அவள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளாள்

என்று பொருள்.


ஏழாவது கர்ப்பமாகப் பிறக்கவேண்டிய கிருஷ்ணனின் கர்ப்பத்தினைஎட்டாவது கர்ப்பமாக மாற்றிஅமைந்ததால்

கருமாரியாகப் பெயர் பெற்றாள். சூரியன் மறைந்தாலும்,

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மறையாதுஎன்று எதற்கும் அஞ்சாது

நாடு ஆண்ட வெள்ளையர்கள், அம்மனுக்கு மட்டும் மிகவும்

அஞ்சி நடுங்கினார்கள்.அம்மை நோய் என்று கேள்விப்பட்டாலே இருநூறு மைல் சென்று ஒளிந்து கொள்வர்.


பெரும்பாலும்நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும்

கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகாமாரி, தன்னைச்

சரணடைந்த ஏழை மக்களின் வினையை வேப்பிலையால்

நீக்கி வருவது கண்கூடு.தமிழ் இலக்கியத்திலும்,பக்தி

இலக்கியத்திலும் சரி தனித்தன்மைக்குத் சான்றாக விளங்குகிறாள்.


மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் பாடல்:-


‘’முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்

என்னத் திகழ்ந்து அம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னியவன் நமக்கு முன்சுரக்கும்

இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!


கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து வந்த இந்துக்கள் பலர் தாங்கள்வாழும் இடங்களில் பட்டினி,பசி, நோய்,வறுமை ஆகியவற்றிலிருந்தும், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம் கல்வியில் சிறந்து விளங்குதல்,போன்றவைகளை வழங்கவும், தங்களைக் காக்கவும் தமது முன்னோர்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கியும்,அத்தெய்வங்களையே சிலைகளாக வைத்து பூசித்தும் வந்துள்ளார்கள்.


வைரவிட காளியம்மன் ஆலயம் ஒரு நூற்றாண்டு வரலாற்றை

கடந்த ஆலயமாகும்.இக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.


வைராவிமட காளியம்மன் ஆலயம் ஒரு நூற்றாண்டு வரலாற்றை கடந்த ஆலயமாகும்.


சிங்கப்பூரில் பழைமை வாய்ந்த ஆலங்களில் இதுவும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில்இவ்வாலயம் கினினி சாலையில் அமைந்திருந்தது. இந்த இடம் மலாயன் இரயில்என்னும் மலாயாவுக்குச் சொந்தமான நிலம். அந்தக் காலக்கட்டத்தில் இரயில்மூலம் மலாயா செல்லும் சிங்கப்பூர் மக்களுக்கு இந்த வழித்தடத்தின் மூலம்தான்சென்றுள்ளார்கள்.


தற்போது அமைந்திருக்கும் தண்டாயுதபாணி கோயில் டோங்ரோட்டிலிருந்து ஆச்சர்ட் ரோடு வழியாகக் கிளினி ரோட்டைக் கடந்து சிங்கப்பூரின்வடபகுதியில் அமைந்திருக்கும் உட்லாண்டு வரை செல்லும் இரயில் தடத்தில்இந்த வைராவிமட காளியம்மன் கோயில் சிறு குடிலாக அமைந்து இருந்தது.


ஆங்கில பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சாலை போடும் பணி, இரயில் தடம் அமைக்கும்பணி, தோட்ட வேலை போன்ற உடல் உழைப்பு பணியில் மிகுதியாக இருந்தவர்கள்தமிழ்நாட்டிலிருந்து வந்த இந்தியர். எனவே தங்களுக்கு ஒரு வழிப்பாட்டுத் தலம்வேண்டுமென்று எண்ணி இரயில் நிர்வாகத்திடமிருந்து நிலம் வாங்கி இந்த வைரவிடகாளியம்மனை ஒரு சிறுகுடிலில் வைத்து வழிபட்டுள்ளனர்.


காலப்போக்கில் இரயில் தடம் விரிவாக்கத்தில் நிர்வாகத்திற்கு நிலம் தேவைப்படவேமாற்று இடமாக ஆச்சர்ட் ரோடு பகுதியில் கோயிலுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.சில காலத்திற்குப் பிறகு மீண்டும் அரசாங்கம் அந்த இடத்தை நகர மேம்பாட்டுக்காகவேண்டவே, மாற்று இடமாக 1921-ல்,21,சோமசட் ரோட்டில் இடம்கொடுக்கப்பட்டது.
அந்த இடத்தில் ஒரு சிறு வீடு போன்ற அமைப்பில் வைராவிமட காளியம்மன் கோயில் இயங்கத் தொடங்கியது. 1933-ல் இவ்வாயலம் இந்து அறக்கட்டளைவாரித்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு 6-ந் தேதி, செப்டம்பர்மாதம் புதிய கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.


8854 ச.அடி கொண்ட வைராவிமட காளியம்மன் கோயில் 1970-ல் நகர சீரமைப்பு,விரிவாக்கதிற்காக அரசாங்கம் மீட்டு கொண்டது. அச்சமயம் இப்போது ஆலயம்அமைந்துள்ள இடமான தோ பா யோ, வீடமைப்பு பேட்டை துரித வளர்ச்சிகொண்டிருந்தது. ஆகவே, மக்கள் தேவைக்கும்,வழிபாட்டுக்கும் புதிய வீடமைப்புபேட்டைக்கு அரசாங்கம் நிலம் கொடுத்தது. மீண்டும் புதிய ஆலயம் தோ பா யோ,

லோரோங்:8 –ல் எழுந்தது. 1986-ல் மார்ச் மாதம், 27-ம் நாள் கும்பாபிஷேகம்நடைபெற்றது.


இவ்வாலயத்தில் மூலவராக அன்னை வைராவிமட காளியம்மன் கருவறையில் வீற்றிருக்கிறாள்.மற்றும் விநாயகர், சுப்ரமணியம் வள்ளியம்மன்,துர்க்கை,அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன்,பெரியாச்சி,மதுரைவீரன்,கல்யாண சுந்தரரேசர், நவகிரகங்கள் என இவ்வாலயத்தில்வழிபாடும் நடக்கிறது.
குருவாயூர் ஐயப்பன் சந்திதியில் ‘துலாபாரம்’ அமைந்துள்ளது.


சிங்கப்பூரில் துலாபாரம் அமைந்த ஓரே ஆலயம் இதுதான்.
இங்கு சரஸ்வதி பாலர் பள்ளியும் முழு நேரமாக நடைபெறுகிறது. பொது நோக்கில்இலவச சட்ட ஆலோசனை சேவையும், சமூக சேவையும் வழங்கப்படுகிறது.முக்கிய விழாவாகச் சித்ரா பெளர்ணமி,பிரம்ம உற்சவம்,சந்தன குட அபிஷேகம்,பெரியாச்சி பூஜை,மகர விளக்கு, அங்காள பரமேஸ்வரி பெளர்ணமி பூஜை சிறப்பாகநடைபெற்று வருகின்றன.


ஆலய முகவரி2001 Toa Payoh Lor 8 Singapore 319259

Tel: 6259 5238

Fax: 6258 7677

Email:
mailto: http://www.blogger.com/

ந ன் றி :- சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம்


கிருஷ்ணன்,

சிங்கப்பூர்.


இந்தக் கோயிலும் சிவன் கோயிலும் ஆர்ச்சர்ட் சாலையில் (Orchard) அமைந்திருந்தன. ஆச்சர்ட் என்பது பழத்தோட்டம் என்ற பொருள்படும். ஆங்கிலேயர்கள் சிங்கப்பூருக்கு வந்தபோது பழமரங்களை நட்டு இப்பகுதியில் தோட்டங்களை உருவாக்கினர். அவற்றில் இந்தியர்கள் - குறிப்பாகத் தமிழர்கள் வேலை செய்தனர். ஆகவேஇப்பகுதிகளில் இரண்டு கோயில்களை நிறுவியதில் ஆச்சரியமில்லை. வைராவிமடகாளியம்மன் கோயில் சாமர்செட் ரோடில் (somerst road) கடைசியாக இருந்து பின்னர் தற்போதுள்ள தோபாயோ வீடமைப்பு பேட்டைக்குச் சென்றது. சாமர்செட்ரோடில் அப்போது நாள் சம்மள ஊழியர்கள் குடும்பம் குடும்பமாக அவர்களுக்குவழங்கப்பட்ட குவார்ட்டசில் வசித்துவந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள்.இவர்கள்தான் இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்கள். ஆச்சர்ரட் ரோடில்இருந்த சிவன் கோயிலுக்குப் படித்தவர்களும் செல்வந்தர்களும் சென்று வந்தனர்.வருவாய் அதிகம் இல்லாத இந்தக் கோயிலுக்கு செளத் பிரிட்ஜ் சாலையில் உள்ள மாரியம்மன் தேவஸ்தானம் உதவி வந்தது சாமர்செட் ரோடிலிருந்து வேறு இடத்திற்கு கோயில் மாற வேண்டும் என்ற நிலைவந்தபோது இக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கினாலும் நிதி திரட்டும் பணி முடுக்கிவடிப்பட்டது. அதில் நண்பர் மகேஸ்வரலிங்கத்துடன் நானும்கொஞ்சம் ஈடுபட்டேன். நிதி திரட்டும் பொருட்டு பெங்களூர் ரமணியம்மாளை அழைத்து வந்தோம். அவரின் பஜனைப் பாடல் கச்சேரியை மாரியம்மன்தேவஸ்தானத்தில் நடத்தினோம். நான் ஒரு சாக்கை எடுத்துக்கொண்டு காசைக்கேட்டு கூட்டத்திரனரிடையே வந்தபோது, "அதோ வாராண்டி பழனி ஆறுமுகம்உங்களைத் தாண்டி. அவன் சாக்கில் போடுங்கடி ஆயிரம் பணத்தைத்தாண்டி" எனதனது பாடலை சற்று மாறிப் பாடி எல்லோரையும் அசத்திவிட்டார். அவர் தொடர்ந்துநடத்திய நிகழ்ச்சி வழி சாக்கு சாக்காக நாங்கள் பணம் திரட்டினோம்.
பெங்களூர் ரமணியம்மாள் மிகவும் நெடிய உருவம் கொண்டவர். பெண்களுக்கும்சாதாரணமாக இலேசான உரோமம் உதடுகளின் மேல் இருப்பது வழக்கம்தான். ஆனில் இவருக்குள்ள உரோமம் மீசையைப் போலவே இருக்கும். அவரை நாங்கள் ரேஸ்கோர்ஸ் ரோடில் பி கோவிந்தசாமிப் பிள்ளைக்குச் சொந்தமான வீட்டில் தங்கவைத்திருந்தோம். ஒரு நாள் இரவு வீட்டிற்கு வெளியே திரு மகேஸ்வரலிங்கத்தின் வாகனத்திற்காகக் காத்துகொண்டு நின்றுகொண்டிருந்தார். அவர்தான் வாகனத்தில் மாரியம்மன்கோயில் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வார். நானும் பெங்களூர் அம்மாளுடன்காத்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து அரவாணிகள்பலர் அழகான சேலைகள் மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து பெங்களூர் இரமணியம்மாளை உரசாத குறையாகக் கடந்து சென்றனர். நிலைமையைஉணர்ந்துகொண்ட அவர், "என்ன பழனியப்பா, என்னை இந்த இடத்திலாதங்கவைத்தாய்" எனக் கேலியாகக் கேட்டு அவர் ஊர் திரும்பும் வரை அதேயே பலதடவை வேடிக்கையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
இங்கு வந்து சென்ற ஓராண்டிற்குள் அவர் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு மிகவும்வருந்தினோம்.
அடுக்குமாடி வீடு பேட்டைகளுக்குச் சென்ற இரண்டாவது கோயில் எனும் சிறப்பும்இக்கோயிலுக்கு உண்டு. முதல் கோயில் உருத்திரகாளியம்மன் கோயில்.

- பழனியப்பன் ஆறுமுகம், சிங்கப்பூர்.

Monday, July 16, 2007

ஸ்ரீ சிவ துர்க்கை கோயில்


Potoing pasir sivan kovil

சிவ துர்க்கை
கோயில்

(பெத்தோங் பாசீர்)
''''''''''''''''''''''''''''''''''''''''

குனிந்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால் வெண்ணீறும்

இனித்த முடைய வெடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டும் தேயித்த மானித்தே


-திருநாவுக்கரசர்,தேவாரம்

ஆதியந்தமில்லா அருட்பெருஞ் ஜோதியாய் விளங்கி,
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ஆனந்த
மூர்த்தியாகி, அருளோடு நிறைந்த, இறைவன் குடிகொண்ட
புனித இடத்தைக் கோவிலென்றும்ஆலயம் என்றும்,
திருநாமங்கள் சூட்டி அழைக்கின்றோம்.

திருக்கோயில்கள் இல்லாத ஊரும், திருவெண்ணீறு அணியாத மக்கள் வாழும் ஊரும்,இலட்சுமி குடிகொள்ளாத ஊரும், ஊர்களாகா என்பது வேத வாக்கு.

வெறும் கோயில் மட்டும் இருந்து விட்டால் மட்டும் போதாது. இறைவனின் கருணைத் திருமேனி கொண்டதிருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி தினம் தோறும் பூஜைகள், உபயங்கள், திருவிழாக்கள் போன்றநிகழ்ச்சிகள் அவ்வப்போது அங்கு நடைபெற்றுக் கொண்டு வந்தால்தான் அது இறைவன் குடிகொண்டிருக்கும்கோயில்களாகும்.
தென்கிழக்காசியாவிலே சிறந்த மையமாக விளங்கும் சிங்கப்பூரிலேமண்ணுமலை (இப்போது பொத்தோங் பாசிர்)என்ற இடத்தில், கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், இராஜகோபுரம் என்று சிற்ப சாஸ்திரப்படி அமைந்துள்ளதுசிவன் கோவில்.


இன்று துர்க்காலெட்சுமி கோவிலென்றும், சிவம் கோயிலென்றும் சிங்கப்பூர், மலேசியா மக்களால் போற்றிவணங்கி வரும் இக்கோயில் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் காலத்தில் பழைய ரூமா மிஸ்கின்என்ற இடத்தில் இவ்வாலயம் இருந்தது. அந்த இடம் காவல் துறை இருந்த இடமுமாகும்.அவ்வாழ் மக்களின் பெறும் முயற்சியின் காரணமாக செயிண்ட் ஜார்ஜஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.அத்தாப்புக் (கூரை) குடிசைக்குப் பதிலாகப் புதிய கோயில் கட்ட நிர்வாகம் முனைந்தது.


1962- ஆம் ஆண்டு வாக்கில், திரு.பி. ரெங்கநாதன், திரு.அருணாசலம் போன்ற பெரியவர்கள்தங்கள் சொந்தச் செலவிலேயே இரதம் ஒன்று கட்டிக் கொடுக்க, திரு. கே.கே. இராமசாமிஎன்ற பக்தரின் பெருமுயற்சியால், இரத ஊர்வலத்துடன் காமன் பண்டிகை போன்ற பெருவிழாவினைக்கொண்டாடி வந்திருக்கிறார்கள்.


1965-ம் ஆண்டு வாக்கில் மன்மதன் கோயில் என்ற பெயரில் உரிமம் பெற்று, புதிய அமைப்பில்,கோயில் கட்ட எண்ணினார்கள் ஆலய நிர்வாகிகள். நாகரீகமும், அறிவு வளர்ச்சியும், இன்றையமறுமலர்ச்சிக்கும், சமுதாய தேவைக்கும் ஏற்ப கோவில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்புதிய கோவில் கட்டுவதற்கு அரும்பாடு பட்டிருக்கிறார்கள்.


கோயில் தர்மகர்த்தாவாக இருந்த திரு. வீ.ஆர். கோபால் சாமி அவர்களின் சேவைபெரிதாக அமைந்துள்ளது.தனது சொந்தச் செலவிலேயே துர்க்கா லட்சுமி சிலை அமைத்து,அதன் கும்பாபிஷேகமும் செய்துள்ளார். நகர மறுசீரமைப்பு வீடமைப்பு நிலம் அரசாங்கத்திற்குத்தேவைப்பட்டதால் இப்போதுள்ள பொத்தோங் பாசிரில் பகுதியில் 1000 சதுர மீட்டர்நிலத்தினை 280,000 வெள்ளிக்கு வாங்கப்பட்டது.


புதிய இடத்தில் வேத முழக்கத்தோடு 22.1.1983 - ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.அரசாங்கத்தின் முழு உரிமம் பெற்ற இவ்வாயலம் 27 –1-1991-ம் ஆண்டு, ஞாற்றுக்கிழமை மிகவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தேறியது.

கோயில் அமைப்பு....!

கோயில் அமைப்புகள் பொதுவாகப் பேரண்ட சிற்றண்ட அமைப்பின் பின்னணியொத்தது.பேரண்டம் என்பது பிரபஞ்சத்தையும், சிற்றண்டம் என்பது மனித உடலையும் குறிக்கும்.பேரண்டத்திலுள்ள எல்லாம் சிற்றண்டத்திலும் உள்ளது.பிரபஞ்சத்தின் சிறு வடிவம்தான் மனிதன்.பேரண்டத்தின் ஜீவ சக்தி ஈஸ்வரன். அவனே பிரபஞ்சத்தில் மனிதனின் ஆத்மாவாகவும் இருக்கிறான்.

புதனே சுவாசப்பை, சுக்கிரனே இருதயம், சூரியனே மூளை, அங்காரகன் கை, சந்திரனே வயிறு,குரு குறி, சனி கால்கள், கோயில்களே சிவம்.இத்தகைய கோயில் பொதுவாகக் கருவறை,அந்தராளம், அர்த்த மண்டபம், நிருத்த மண்டபம், விருஷ மண்டபம், பிரகாரம், பலிபீடம்,கொழி மரம், பரிவார ஆலயங்கள், கோபுரம், திருக்குளம்,மதில் ஆகிய அங்கங்கள் உடையதாகஇருக்கும். அந்த அமைப்பில் அமைந்த ஆலயமே இவ்வாலயம்.

கருவறை. கர்ப்பக்கிரஹம் என அழைக்கப்படும் மூலஸ்தான மூலவராகச் சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்த மூலஸ்தான அமைப்பு கெஜபிருஷ்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தட்சணா மூர்த்தி கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள கோஷ்டத்தில் தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.லிங்கோத்பவர் கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள கோஷ்டத்தில் தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில்அமைக்கப்பட்டுள்ளது.பிரம்மா கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள கோஷ்டத்தில் தெற்கு நோக்கிஅமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

அர்த்த மண்டபம் கர்ப்பக் கிரஹத்தோடு ஒட்டி முன்புறத்தில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில்அம்மன் தெற்கு நோக்கியும், நிருத்த கணபதி தெற்கு நோக்கி நிருத்த (நாட்டிய) நிலையிலும்,விஷ்ணு துர்க்கை வடக்கு நோக்கியும்அமைந்துள்ளன.`மூலஸ்தானத்தை ஒட்டியதாகக் கிழக்குநோக்கி அமைந்துள்ள பீடத்தில் முருகர் ஆலயம் அழகிய கட்டிடக்கலையுடன் அமைந்துள்ளது.

இடது பாகத்தில் மூலவரை நோக்கி சண்டிகேஸ்வரர், ஈசான்ய பகுதியில் நவக்கிரங்களும்,இடது பாகத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் தெற்கு நோக்கியநிலையில் சிறு அளவாக அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் முக்கிய கடவுளாக வழிபடக்கூடிய துர்க்கை அம்மன் தெற்கிலிருந்து வடக்காகஇருக்கிறது. கோபுரத்தின் முன் ஆலயத்தைக் காவல் காக்கும் இரண்டு துவார பாலகர்கள்கருங்கல்லினால் வடிக்கப்பட்டுள்ளன.

இவ் வாலயத்தில் முக்கிய, விஷேச பூசையாக இராகுகால துர்க்கா பூசையும்,வழிபாடுகளும்நடக்கிறது.அடுத்து சிவராத்தியின் போது நான்கு கால பூசைகள் சிறப்பாக கொண்டாப்படுகிறது.


-கிருஷ்ணன்,


சிங்கை.


பொத்தோங் பாசிர் என்றால் என்ன? மண்ணுமலை என்ற காரணப் பெயர் வரக்காரணம் என்ன? சிவன் ஆலயம் துர்காஆலயமாகப் பிரபலமடையக் காரணம்என்ன? இடம் மாற வேண்டிய நிலையில் சரியான இடம் கிடைக்காத நிலையில்பொத்தோங் பாசிரிலேயே கோயிலைக் கட்டவேண்டும் என நிலை எடுத்த நிர்வாகக்குழுவின் நிலைப்பாட்டிற்கு உதவிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
பொத்தோங் பாசிர் என்பது மலாய்ச் சொல். பொத்தோங் என்றால் வெட்டுதல்,தோண்டுதல் எனப் பொருள்படும். பாசிர் என்பது மணல். மணல் தோண்டும் இடம்.இதனைத்தான் தமிழில் மண்ணுமலை என்றார்கள். சிங்கப்பூரில் மலைகள் ஒன்றும்இல்லை. எல்லாம் குன்றுகள்தான் அதுவும் சிறுகுன்றுகள்தான். இருப்பினும் மிகைப்படுத்தலில் நமக்கு நிகர் வேறு யாரும் இல்லை. ஆகவே சிறு குன்றுகள் கூடமலையாயின. இந்த மண்ணு மலையிலிருந்து மண்ணை வெட்டி எடுத்து சாலைகள்மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்கு சிங்கப்பூரின் இதர பகுதிகளுக்கு எடுத்துச்சென்றார்கள்.
மண்ணுமலைப் பகுதியில் நிறையத் தமிழர்களும் இந்தியர்களும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது குடியிருந்தனர். ஆச்சர்ட் ரோடில் இருந்த சிவன் கோயில் சிவன் சிலைஇங்குதான் முதலில் இருந்தது என்று கூறுவோரும் உண்டு. இந்த மண்ணுமலைப்பகுதியில் செட்டியார்கள் நிலங்களையும் வீடுகளையும் வாங்கினார்கள். அவர்களில் மிகவும்பிரபலமானவர் மெய்யப்ப செட்டியார். அவரின் நினைவாக இன்றும் இந்தக் கோயிலுக்குச் செல்லும் ஒரு பாதைக்குப் பெயர் மெய்யப்ப செட்டியார் ரோடுஎன்றே அழைக்கப்படுகிறது. என் தந்தையார் சிறுவயதில் 1930களில் தமிழகத்திலிருந்துசிங்கை வந்தபோது இங்குதான் முதலில் இருந்தார். அப்பாவு என்ற முனிசில் கவுன்சிலர் வீட்டாருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அவரின் வழித்தோன்றல்கள் எனக்குநண்பர்கள்.



சிவன் கோயிலாக இக்கோயில் பிரபலமடைந்த வேளையில் மதுரையிலிருந்து கோயிலில் பணியாற்ற வந்த இலங்கை வம்சாவளி சிவாச்சாரியாரால் சிங்கையில் முதன் முதலில்இங்கு துர்க்கையம்மனுக்காக விளக்குப் பூசையைத் தொடங்கிவைத்தார். அது பெண்களிடையே மிகவும் பிரபலமானது, கோயிலுக்குத் தேவையான நிதியும் இந்த வழிபாட்டுமூலம் கிடைத்தது. அந்தச் சிவாச்சாரியார் தமிழ்நாட்டிற்குத் திரும்பித் சென்றுவிட்டாலும் அவர் தொடங்கி வைத்த பூசை இன்றும் இக்கோயிலில் நடைபெறுகிறது. அவரின் மகள்தான் செல்வி லதா- சிங்கை நாளிதழான தமிழ் முரசில் வேலை செய்கிறார்(அண்மையில் கூட அவரின் கவிதைகள் சில விகடனில் பிரசுரமானது).
கோயிலைப் புதிய வீடமைப்பு பேட்டையாக விளங்கும் இந்தப் பகுதியில்கட்டவேண்டும் என்று நிர்வாகத்தினர் நினைத்தபோது அவர்களுக்கு மிகவும் உதவியாகஇருந்து அரசாங்கத்திடமிருந்து நிலத்தை பெற பெரும் உதவியாக இருந்தவர் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சித்திக் சானிப் எனும் மலாய்க்காரர்.


-பழனியப்பன் ஆறுமுகம் .

Sri Siva Durga Temple,
8 Potong Pasir Ave.
2Singapore. 358362
Tel.62841899 & 62838002
Fax. 62862096